ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. பரகதி உண்டென்ன இல்லை என் போர்கள்
    நரகதி செல்வது ஞாலம் அறியும்
    இரகதி செய்திடு வார்கடை தோறும்
    துரகதி உண்ணத் தொடங்குவர் தாமே.
  • 2. பறப்பட்டுப் போகும் புகுதும்என் நெஞ்சில்
    திறப்பட்ட சிந்தையைத் தெய்வம்என் றெண்ணி
    அறப்பட் டமரர் பதி யென் றழைத்தேன்
    இறப்பற்றி னேன் இதிங் கென்னென்கின் றானே.
  • 3. திடலிடை நில்லாத நீர்போல ஆங்கே
    உடலிடை நில்லா உறுபொருள் காட்டிக்
    கடலிடை நில்லாக் கலம்சேரு மாபோல்
    அடல்எரி வண்ணனும் அங்குநின் றானே.
  • 4. தாமரைநூல் போலவ தடுப்பார் பரத்தொடும்
    போம்வ வேண்டிப் புறத்தே உதர்வர்
    காண்வ காட்டக்கண் காணாக் கலதிகள்
    தீந்நெறிச் சென்று திரிகின்ற வாறே.
  • 5. மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள்
    கூடுவர் நந்தி யவனைக் குறித்துடன்
    காடும் மலையும் கழனி கடல்தொறும்
    ஊடும் உருவினை உன்னகி லாரே.
  • 6. ஆவது தெற்கும் வடக்கும் அமரர்கள்
    போவர் குடக்கும் குணக்கும் குறிவ
    நாவினில் மந்திரம் என்று நடுஅங்கி
    வேவது செய்து விளங்கிடு வீரே.
  • 7. மயக்குற நோக்கினும் மாதவம் செய்வார்
    தமக்குறப் பேசின தாரணை கொள்ளார்
    சினக்குறப் பேசின தீவனை யாளர்
    தமக்குற வல்வினை தாங்கிநின் றாரே.