ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. தற்பதம்தொம்பதம் தானாம் அசிபதம்
    தொற்பதம் மூன்றும் துரியத்துத் தோற்றவே
    நிற்பது உயிர்பரம் நிகழ்சிவ மும் மூன்றின்
    சொற்பத மாகும் தொந்தத் தசியே.
  • 2. தொந்தத் தசிமூன்றில் தொல்கா மியமாதி
    தொந்தத் தசிமூன்றில் தொல்தா மதமாதி
    வந்த மலம்குணம் மாளல் சிவம் தோன்ற
    இந்துவின் முன்இருள் நீங்குதல் ஒக்குமே.
  • 3. தொந்தத் தசிய வாசியில் தோற்றியே
    அந்த முறைஈரைந் தாக மதித்திட்டு
    அந்த மிலாத அவத்தைஅவ் வாக்கியத்(து)
    உந்து முறையில் சிவ முன்வைத் தோதிடே.
  • 4. வைத்துச் சிவத்தை மதிசொரூ பானந்தத்து
    உய்த்துப் பிரணவ மாம்உப தேசத்தை
    மெய்த்த இதயத்து விட்டிடு மெய்யுணர்ந்து
    அத்தற் கடிமை அடைந்துநின் றாயே.
  • 5. தொம்பதம் மாயையுள் தோன்றிடும் தற்பதம்
    அம்பரை தன்னில் உதிக்கும் அசிபதம்
    நம்புறு சாந்தியில் நண்ணும் அவ்வாக்கிய
    உம்பர் உரைதொந்தத் தசி வா சியாவே.
  • 6. ஆகிய அச்சோயம் தேவதத் தின்இடத்து
    ஆகி யவைவிட்டால் காயம் உபாதானம்
    ஏகிய தொம் `தத் தசி` என்ப மெய்யறி
    வாகிய சீவன் பரசிவ னாமே.
  • 7. தாமத காமிய மாதி தகுகுணம்
    ஆம்மலம் மூன்றும் அகரா உகாரத்தோடு
    ஆம்அறும் அவ்வும்உவ்வும் மவ்வாய் உடல்மூன்றினில்
    தாம்ஆம் துரியமும் தொம்தத் தசியதே.