ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 26. முச்சூனிய தொந்தத்தசி

பதிகங்கள்

Photo

தற்பதம்தொம்பதம் தானாம் அசிபதம்
தொற்பதம் மூன்றும் துரியத்துத் தோற்றவே
நிற்பது உயிர்பரம் நிகழ்சிவ மும் மூன்றின்
சொற்பத மாகும் தொந்தத் தசியே.

English Meaning:
Tvam-Tat Asi

Tvam-Pada, Tat-Pada and Asi-Pada
All three states in Turiya arose;
In all three states one of Three stands
—Jiva, Para and Siva in order respective—
Together are they known
By the expression compounded,
That is, Tvam-Tat-Asi (Maha Vakyam)

Tamil Meaning:
துவம் தத், அசி, என்னும் மூன்று சொற்கள் தொன்மை -யான வேதத்தில் சொல்லப்பட்டனவாகும். இவை உலகியலில் தோன்றுதல் போலாது யோக துரியம். நின்மலதுரியம், பரதுரியம் ஆகிய முத்துரியங்களில் உணர்வின்கண் தோன்றும் பொழுது அவை முறையே சீவ அறுதியும், பர அறுதியும், சிவ அறுதியுமாய் நிற்கும்.
Special Remark:
`சிவம்` என்பது அருளையும் `பரம்` என்பது ஆனந்தத் -தையும் குறிக்கும் நிற்பது, தொழிற்பெயர். ஈற்றில் உள்ள பதம் நிலை, முடிநிலை. ``உயிர், பரம்`` என்பவற்றிலும் எண்ணும்மை விரிக்க. ஈற்றில் உள்ள ``தொந்தத்தசி`` என்பதை, ``மூன்றின்`` என்பதற்கு முன்னே கூட்டி, `ஆம்` அம்மூன்றின், எனச் சுட்டு வருவித்துரைக்க. சிறப்பு நோக்கி, `அசி` என்பதை மட்டும் `முன்னர், தான் ஆம் அசி` என்றார்.
இதனால், `முச்சூனியம் ஆவன இவை` என்பதும், அவை தோன்றும் இடங்களும் கூறப்பட்டன.