ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 26. முச்சூனிய தொந்தத்தசி

பதிகங்கள்

Photo

தொம்பதம் மாயையுள் தோன்றிடும் தற்பதம்
அம்பரை தன்னில் உதிக்கும் அசிபதம்
நம்புறு சாந்தியில் நண்ணும் அவ்வாக்கிய
உம்பர் உரைதொந்தத் தசி வா சியாவே.

English Meaning:
Tvam-Tat-Asi is Grand Vakya

Tvam-Pada arises in Maya (Sakti)
Tat-Pada in comely Parai (Sakti)
Asi-Pada leads to Santhi (Kala)
That Vakya (expression) is verily of Celestials,
Tvam-Tat-Asi by Yogic breathing attained.
Tamil Meaning:
`தத்துவமசி` மகாவாக்கியத்தில் `துவம்` பதப்பொரு ளாகிய சீவன் உயிர் தத்துவங்களையே `தான்` என மயங்கும் மயக்கம் மாயையால் தோன்றுவதாகும். தற்பதப் பொருளாகிய பதி ஐந்தொழில் செய்தற் பொருட்டுப் பரா சத்தியினின்றும் சிவமாகித் தோன்றும் சீவன் சிவமாதலைத் தெரிவிப்பதாகிய `அசி` பதப்பொருள் உயிர் அனைத்துப் பாசங்களினின்றும் நீங்கித் தூயதாய நிலையில் தோன்றும். இனி, `தத்துவமசி` மகா வாக்கியத்தில் உள்ள `அசி, தத், துவம்` என்னும் முப்பதங்களும் முத்தி பஞ்சாக்கரத்தில் முறையே `வா,சி,ய` மூன்றெழுத்துக்களில் அடங்கும்.
Special Remark:
எனவே, தத்துவமசி மகாவாக்கியப் பயிற்சியின் பயனாகிய முச்சூனியங்களை முத்தி பஞ்சாக்கரப் பயிற்சியே தரும்` என்பது குறிப்பெச்சம். ``பதம்`` மூன்றும் அவற்றின் பொருளைக் குறித்த சொல்லாகு பெயர்களாம். நம்புதல், விரும்புதல் தூய்மையை, ``சாந்தி`` என்றார். உம்பர் உரை, தொன்மை மொழி ஈற்றில் யகர உயிர்மெய் செய்யுள் நோக்கி நீட்டல் பெற்றது.
இதனால், முத்தி பஞ்சாக்கரம், `தத்துவமசி` இவற்றின் பொருள் தோன்றுமாறு கூறப்பட்டது.