ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. ஏறிய வாறே மலம்ஐந் திடைஅடைந்
    தாறிய ஞானம் சிவோகம் அடைந்திட்டு
    வேறுமென் மேல்முச் சொரூபத்து வீடுற்றங்(கு)
    ஈறதில் பண்டைப் பரன்உண்மை எய்துமே.
  • 2. மூன்றுள மாளிகை மூவர் இருப்பிடம்
    மூன்றினில் முப்பதோ ராறு முதிர்வுள
    மூன்றினினி னுள்ளே முளைத்தெழும் சோதியைக்
    காண்டலும் காயக் கணக்கற்ற வாறே.
  • 3. உலகம் புடைபெயர்ந்(து) ஊழியும் போன
    நிலவும் சுடரொளி மூன்றும்ஒன் றாய
    பலவும் பரிசோடு பான்மையுள் ஈசன்
    அளவும் பெருமையும் ஆர்அறி வாரே.
  • 4. பெருவாய் முதல் எண்ணும் பேதமே பேதித்(து)
    அருவாய் உருவாய் அருவுரு வாகிக்
    குருவாய் வரும்சத்தி கோன்உயிர்ப் பன்மை
    உருவாய் உடன்இருந்(து) ஒன்றாய் அன் றாமே.
  • 5. மணிஒளி சோபை இலக்கணம் வாய்த்து
    அணியென லாய்நின்ற ஆறது போலத்
    தணிமுச் சொருபாதி சத்தியால் சாரப்
    பணிவித்த பேர்நந்தி பாதம்பற் றாயே.
  • 6. கல்லொளி மாநிறம் சோபைக் கதிர்தட்டல்
    நல்ல மணிஒன்றில் நாடில்ஒண் முப்பதம்
    சொல்லறு பாழில் சொல்லறு பேர்உரைத்(து)
    அல்லறு முத்திராந் தத்தனு பூதியே.
  • 7. உடந்தசெந் தாமரை யுள்ளுறு சோதி
    நடந்தசெந் தாமரை நாதம் தகைந்தால்
    அடைந்த பயோதரி அட்டி அடைத்த
    இடந்தரு வாசலை மேல்திற வீரே.