ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. கருத்துறை அந்தகன் றன்போல் அசுரன்
    வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்
    வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக்
    குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே. 
  • 2. கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்
    தலையைத் தடிந்திட்டுத் தான்அங்கி யிட்டு
    நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்
    தலையை யரிந்திட்டுச் சந்திசெய் தானே.
  • 3. எங்கும் பரந்தும் இருநிலந் தாங்கியும்
    தங்கும் படித்தவன் தாளுணர் தேவர்கள்
    பொங்கும் சினத்துள் அயன்தலை முன்னற
    அங்கச் சுதனை உதிரங்கொண் டானே. 
  • 4. எங்கும் கலந்தும்என் உள்ளத் தெழுகின்ற
    அங்க முதல்வன் அருமறை யோதிபாற்
    பொங்குஞ் சலந்தரன் போர்செய்ய நீர்மையின்
    அங்கு விரற்குறித் தாழிசெய் தானே.
  • 5. அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
    முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
    முப்புர மாவது மும்மல காரியம்
    அப்புரம் எய்தமை யாரறி வாரே. 
  • 6. முத்தீக் கொளுவி முழங்கெரி வேள்வியுள்
    அத்தி யுரிஅர னாவ தறிகிலர்
    சத்தி கருதிய தாம்பல தேவரும்
    அத்தீயி னுள்ளெழுந் தன்று கொலையே. 
  • 7. மூலத் துவாரத்து மூளும் ஒருவனை
    மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்
    காலுற்றுக் காலனைக் காய்ந்தங் கியோகமாய்
    ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே. 
  • 8. இருந்த மனத்தை இசைய இருத்திப்
    பொருந்திய லிங்க வழியது போக்கித்
    திருந்திய காமன் செயலழித் தங்கண்
    அருந்தவ யோகங் கொறுக்கை அமர்ந்ததே.