
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 2. பதிவலியில் வீரட்டம் எட்டு
பதிகங்கள்

கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்
தலையைத் தடிந்திட்டுத் தான்அங்கி யிட்டு
நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்
தலையை யரிந்திட்டுச் சந்திசெய் தானே.
English Meaning:
Daksha, the son of Brahma fatally erred;Deadly was his sin
To defy the Lord `s primacy;
And the Lord smote his head
And consigned it to flames
And then bethought,
``Such like are needed for this world
An object lesson to serve``
And so, fixed a sheep`s head to the trunk
Thus let him be.
Tamil Meaning:
தக்கன் சிவபெருமானை இகழ்ந்து செய்த வேள்வியை அப்பெருமானது அருளாணையின்வழி வீரபத்திரக் கடவுள் சென்று அழித்தபொழுது, தக்கனது இகழ்ச்சியை மறாது உடன் பட்டிருந்த தேவர் பலரையும் பலவாறு ஒறுத்தலோடு ஒழித்து, அவ் இகழ்ச்சியைச் செய்தவனாகிய தக்கனது தலையை வெட்டித் தீக்கு இரையாக்கி, `சிவனை இகழ்ந்தவர் பெறும் இழிநிலைக்கு இவன் தக்க சான்றாகற்பாலனாகலின், அதன் பொருட்டு இவன் உலகிற்கு இன்றியமையாத ஒருவன்` எனக் கருதி அவனை அழித்தொழியாது ஆட்டுத் தலையைப் பொருத்தி உயிரோடு இருக்கச் செய்தார்.Special Remark:
இவ்வீரச்செயலைக் குறிப்பது திருப்பறியலூர் வீரட்டம்.கொலையில் - வேள்வியை அழித்தபொழுது. பிழைத்த - பிழை செய்த. பிரசாபதி - பிரமன்; இப்பெயர் அவன் மகனாகிய தக்கனுக்கும் வழங்கும். அதனால், அவனை, `தட்சப் பிரசாபதி` என்பர். பிரசாபதி, இங்கு, தட்சப் பிரசாபதியே. ``தான்`` என்றது வீரபத்திரக் கடவுளை. நிலை - இழிநிலை; இதில் நான்கனுருபு தொகுத்தல். ``தலையை அரிந்திட்டு`` என்பதில், ``ஆட்டுத் தலையை`` என்பது ஆற்றலாற் கொள்ளக்கிடந்தது. சந்தி செய்தல் - பொருத்துதல். இவ்வரலாறு கந்தபுராணத்துள் விரித்துக் கூறப்படுதல் காண்க. இவ்வரலாறும் சிவபெருமான் ஏவுதற் கருத்தாவாய் நின்று செய்ததேயாதல் உணர்க.
இதனால் தக்கன் வேள்வியை அழித்த வரலாறும், சிவ நிந்தை உய்தியில் குற்றமாதலாகிய உண்மையும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage