ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு
    வட்டத் திரையனல் மாநிலம் ஆகாயம்
    ஒட்டி உயிர்நிலை என்னும்இக் காயப்பை
    கட்டி அவிழ்ப்பன் கண்ணுதல் காணுமே. 
  • 2. உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை
    நச்சியே இன்பங்கொள் வார்க்கு நமன்இல்லை
    விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத்
    தச்சு மவனே சமைக்கவல் லானே.
  • 3. குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக்
    குசவன் மனத்துற்ற தெல்லாம் வனைவன்
    குசவனைப் போல்எங்கள் கோன்நந்தி வேண்டில்
    அசைவில் உலகம் அதுஇது வாமே. 
  • 4. விடையுடை யான்விகிர் தன்மிகு பூதப்
    படையுடை யான்பரி சேஉல காக்கும்
    கொடையுடை யான்குணம் எண்குண மாகும்
    சடையுடை யான்சிந்தை சார்ந்துநின் றானே.
  • 5. உகந்துநின் றேபடைத் தான்உல கேழும்
    உகந்துநின் றேபடைத் தான்பல ஊழி
    உகந்துநின் றேபடைத் தான்ஐந்து பூதம்
    உகந்துநின் றேஉயிர் ஊன்படைத் தானே. 
  • 6. படைத்துடை யான்பண் டுலகங்கள் ஏழும்
    படைத்துடை யான்பல தேவரை முன்னே
    படைத்துடை யான்பல சீவரை முன்னே
    படைத்துடை யான்பர மாகிநின் றானே.
  • 7. ஆதி படைத்தனன் ஐம்பெரும் பூதம்
    ஆதி படைத்தனன் ஆசில்பல் ஊழி
    ஆதி படைத்தனன் எண்ணிலி தேவரை
    ஆதி படைத்தவை தாங்கிநின் றானே.
  • 8. உண்ணின்ற சோதி உறநின்ற ஓருடல்
    விண்ணின் றமரர் விரும்பும் விழுப்பொருள்
    மண்ணின்ற வானோர் புகழ்திரு மேனியன்
    கண்ணின்ற மாமணி மாபோதமாமே. 
  • 9. ஆரும் அறியாத அண்டத் திருவுருப்
    பார்முத லாகப் பயிலுங் கடத்திலே
    நீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச்
    சோராமற் காணுஞ் சுகம்அறிந் தேனே.