ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 13. அநுக்கிரகம்

பதிகங்கள்

Photo

எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு
வட்டத் திரையனல் மாநிலம் ஆகாயம்
ஒட்டி உயிர்நிலை என்னும்இக் காயப்பை
கட்டி அவிழ்ப்பன் கண்ணுதல் காணுமே. 

English Meaning:
He is the Wind that Blows in Directions Eight
He is the wavy ocean that girdles the earth,
He is the fire, earth and sky;
Know this:
He is the One that binds and unbinds
The body that holds life precious.
Tamil Meaning:
`காற்று, நீர், நெருப்பு, நிலம், வானம்` என்னும் ஐம்பெரும் பூதங்களும் ஒருங்கியைத்துப் பின்னிய `உயிருக்கு இடம்` எனச் சொல்லப்படுகின்ற இந்த உடம்பாகிய பைக்குள் உயிர்களை முன்பு அடைத்துக் கட்டிவைத்துப் பின்பு அவிழ்த்து வெளிவிடுகின் றான் சிவபெருமான்.
Special Remark:
``வட்டத் திரை``, கடல்; பின்மொழி ஆகுபெயர். இது நீரைக் குறித்தது. ``ஒட்டி`` என்பதன்பின் `ஆக்கிய` என ஒருசொல் வருவிக்க. `கட்டியவன் கட்டியவாறே விட்டொழிதல் இல்லை; அவிழ்க்கின்றான்` என அருளலாகிய அறக்கருணையது சிறப்பை உணர்த்தினார்.
இதனால், பந்தமாகிய மறைத்தலையேயன்றி, வீடாகிய அருளலைச் செய்பவனும் சிவபெருமானே என்பது கூறப்பட்டது.
``கட்டிய நீயே அவிழ்க்கின் அல்ல
தெட்டனை யாயினும் யான் அவிழ்க் கறியேன்``
-திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது - 9
என்று அருளியதும் இதனை.