ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 13. அநுக்கிரகம்

பதிகங்கள்

Photo

குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக்
குசவன் மனத்துற்ற தெல்லாம் வனைவன்
குசவனைப் போல்எங்கள் கோன்நந்தி வேண்டில்
அசைவில் உலகம் அதுஇது வாமே. 

English Meaning:
The potter mounts the clay on the wheel
The potter fashions as he conceives
Even as the Potter our Lord Nandi is;
He moulds the world, this way and that
The way His Fancy takes.
Tamil Meaning:
மட்கலத்தை வனைகின்ற குயவன் மண்ணைக் கொண்டு ஒருவகைக் கலத்தையே வனையாது, குடம் சால் கரகம் முதலாகப் பல்வேறு வகைப்பட வனைவன். அதுபோலவே, எங்கள் சிவபெருமானது இச்சையால் தளர்வில்லாத உலகம் பல்வேறு வகைப்படத் தோன்றும்.
Special Remark:
``அது இது ஆம்`` என்றது, `பல்வேறு வகையினவாம்` என்றவாறு. `அங்ஙனம் பல்வேறாகத் தோற்றுவிக்க விரும்புதல், உயிர்களது கன்மத்துக்கு ஏற்பவாம்` என்பது, குயவன் பல்வேறாக வனைதல், கொள்வார் விருப்பம் நோக்கியதாலாகிய உவமத்தால் பெற்றாம். உவமைக்கேற்ப, `வேண்டி உலகத்தை அது இதுவாக வனைவான்` என்று இறைவன் மேல் வைத்து ஓதாது. ``உலகம் அது இது ஆம்`` என உலகின்மேல் வைத்து ஓதினார், குயவன் கருவியால் செய்தல்போலச் செய்யாது இறைவன் நினைவு மாத்திரையானே செய்ய அவனது முன்பில் உலகம் தொழிற்படும் என்றற்கு.
இதனால், கட்டிய வகை ஒன்றன்றிப் பல என்பது பொது வகையால் கூறப்பட்டது. இதனானே, அவிழ்க்கும் காலத்து அவை அனைத்தையும் முற்ற நீக்குதல் பெறப்பட்டது.