ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Paadal

  • 1. ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்
    நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை
    இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
    படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே.
  • 2. எம்மா ருயிரும் இருநிலத் தோற்றமும்
    செம்மா தவத்துச் செயலின் பெருமையும்
    அம்மான் திருவருள் பெற்றவ ரேயல்லால்
    இம்மா தவத்தின் இயல்பறி யாரே.
  • 3. பிறப்பறி யார்பல பிச்சைச்செய் மாந்தர்
    சிறப்பொடு வேண்டிய செல்வம் பெறுவர்
    மறப்பில ராகியே மாதவம் செய்வார்
    பிறப்பினை நீக்கும் பெருமைபெற் றாரே.
  • 4. இருந்து வருந்தி எழிற்றவம் செய்யும்
    பெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றே
    இருந்திந் திரனே எவரே எனினும்
    திருந்தும்தம் சிந்தை சிவனவன் பாலே.
  • 5. கரந்துங் கரந்திலன் கண்ணுக்குந் தோன்றான்
    பரந்த சடையன் பசும்பொன் னிறத்தன்
    அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
    விரைந்து தொழப்படும் வெண்மதி யானே.
  • 6. அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசும்
    பகைத்தெழும் பூசலுட் பட்டார் நடுவே
    அமைத்ததோர் ஞானமும் ஆத்தமும் நோக்கி
    இமைத்தழி யாதிருந் தார்தவத் தாரே.
  • 7. சாத்திரம் ஓதும் சதுர்களை விட்டுநீர்
    மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின்
    பார்த்தஅப் பார்வை பசுமரத் தாணிபோல்
    ஆர்த்த பிறவி அகலவிட் டோடுமே.