
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 5.தவம்
பதிகங்கள்

எம்மா ருயிரும் இருநிலத் தோற்றமும்
செம்மா தவத்துச் செயலின் பெருமையும்
அம்மான் திருவருள் பெற்றவ ரேயல்லால்
இம்மா தவத்தின் இயல்பறி யாரே.
English Meaning:
Only the Blessed Know Greatness of TapasThe mystery of life, the origin of earth,
The might of pure deeds of tapas
Who knows them all
But they that receive Lord`s Grace?
The rest know naught of tapas supreme.
Tamil Meaning:
நமது அரிய உயிருணர்வும், அவ்வுணர்விற்கு இன்றியமையாததாய் உள்ள உலகம் உண்டாகி நிற்பதும், அங்ஙனம் நிற்குங்கால் அதன்கண் நிகழற்பாலதாய செவ்விய பெரிய தவச் செய லின் சிறப்பும் ஆகிய யாவும் இறைவன் திருவருளை அடிநிலையாகக் கொண்டனவேயாம். அதனால், `இத்தவத்தன் இயல்பு இது` என்பதை யும் அவ்வருளைப் பெற்றவரல்லது பிறர் அறிய மாட்டார்.Special Remark:
``உயிர்`` என்றது அதன் உணர்வையேயாதல் அறிக. ``தோற்றம்`` என்றது, அதனபின்னதாகிய நிலையையும் உணர நின்றது. செவ்விய பெரிய தவமாவது வீடுபயக்கும் தவம். அஃது இறைவனை வழிபடுதலேயாம். `உண்மைத் தவமாவது இறை வழி பாடே என்பதை உணர்தலும் திருவருளின்றியாகாது` என்பது உணர்த்துகின்றவர், அதற்கு ஏதுவாக அனைத்தும் திருவருளை திருவருளை முதலாகக் கொண்டமையை முன்னர் உணர்த்தினார். திருவருளை முதலாகக் கொண்டவற்றை ஒற்றுமை பற்றி, ``திருவருள்`` என்றே கூறினார். `அது பெற்றவரே யல்லால்` என வேறு தொடராக்கி யுரைக்க. திருவருள் பெறாதவர் பிறவற்றையே `தவம்` என மயங்கி அல்லலுறுதலை நினைக.இதனால், உண்மைத் தவம் உணர்தற்கரிதாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage