
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 22. சிவ தரிசனம்
பதிகங்கள்

துன்னிநின் றான்தன்னை உன்னிமுன் னாஇரு
முன்னி யவர்தம் குறையை முடித்திடும்
மன்னிய கேள்வி மறையவன் மாதவன்
சென்னியுள் நின்றதோர் தேற்றத்த னாமே.
English Meaning:
Seek Him There WithinHe who stands thus
Of Him you think;
Seek His Presence;
He ends the imperfections
Of those who seek Him;
He is the unwritten Veda immutable;
He is of Tapas great
He stands within the head;
For sure it is.
Tamil Meaning:
முன் மந்திரத்திற் கூறியவாறு மலர்க் கந்தம்போலத் துள்ளி நிற்கின்ற சிவன் தன்னை நினைந்திருப்பவர் குறையை முடிப்பவன். வேதத்தை ஓதும் அயன், மற்றும் மால் முதலியோருடைய தலைக்குள் இருந்து அறிவைப் பிறப்பிப்பவனும் ஆவன். ஆகையால் அவனையே நினைத்து அவன் திருமுன்பில் இரு.Special Remark:
`இருப்பின் உனக்குக் குறை உண்டாகாது` என்பதாம். இரண்டாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க. ``கேள்வி`` என்றது `சுருதி` என்றபடி. சிவனது திருமுன்பிலே (சந்நிதியிலே) இருத்த லானது புற உலகை நோக்கும்பொழுதும் அவற்றின் இயல்பினைச் சிவனது அருளாகவே கண்டிருத்தலாம். ``மறையவன், மாதவன்`` என்றது உபலக்கணம்.இதனால், சிவனைச் சேர்ந்திருப்பவர் செம்மையராய் விளங்குதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage