ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 11. சற்புத்திர மார்க்கம்

பதிகங்கள்

Photo

நின்று தொழுவன் கிடந்தெம் பிரான்றன்னை
என்றுந் தொழுவன் எழிற்பரஞ் சோதியை
துன்றுமலர் தூவித் தொழுமின் தொழுந்தொறுஞ்
சென்று வெளிப்படுந் தேவர் பிரானே.

English Meaning:
Approach Lord Through Kriya Path

In reverence I stand and adore mine lord;
In humility I prostrate and praise Him;
And forever and ever shall I worship the Divine Light of Beauty;
You too shall seek Him with flowers fragrant,
The more you adore Him
The fuller He reveals Himself unto you,
He the Lord of Beings Heavenly.
Tamil Meaning:
எம் பெருமானாகிய சிவனை யான் அவன் முன்னே, நின்றும், கீழே வீழ்ந்தும் மிகுந்த மலர்களைத் தூவி வணங்குவேன். இஃது ஒருகாலத்தில் மட்டுமன்று; எக்காலத்துமாம். இவ்வாறு தொழு வாரிடத்தில் அவர் தொழுந்தோறும் தேவர் தலைவனாகிய சிவபிரான் சென்று வெளிப்பட்டு நிற்பான். அதனால், நீங்களும் அவனை அவ்வாறு வணங்குங்கள்.
Special Remark:
தம்மை அடுத்தார்க்கு மலர் தூவித்தொழுமாறு பணித் தமையால், தாமும் அவ்வாறு தொழுதல் பெறப்பட்டது. ``என்றும்`` என்றது, `யோக ஞானங்கள் கைவந்த பின்னும்` என்றவாறு.
இதனால், கிரியை சிவனை வெளிப்படக் காணும் பயனைத் தருவதாய்ச் சகமார்க்க சன்மார்க்கங்களை அடைந்தோர்க்கும் ஒழியலாகாத சற்புத்திர மார்க்கமாதல் கூறப்பட்டது. இந்நாயனார் இம் மந்திரத்தில் தம் செய்கையை எடுத்துக் கூறினமையே இதற்குப் போதிய சான்றாகும். மற்றும் ``புறம்பேயும் அரன்கழல்கள் பூசிக்க`` 2 என்றற் றொடக்கத்தனவாகச் சாத்திரங்களிலும், வரும் உரையளவை களும், நால்வர் ஆசிரியர் முதலியோரது ஒழுகலாறுகளுமாகிய சான்றுகள் பலவும் நோக்கி உணர்க.