ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 11. சாம்பவி மண்டலச் சக்கரம்

பதிகங்கள்

Photo

ஆரும் உரைசெய்ய லாம்அஞ் செழுத்தாலே
ஆரும் அறியாத ஆனந்த ரூபம்ஆம்
பாரும் விசும்பும் பகலும் மதியதில்
ஊரும் உயிரும் உணர்வது மாமே.

English Meaning:
Sambhavi`s Form

Chanting the Letters Five
All may worship the Chakra of Sambhavi,
She is Bliss-Form that none has seen,
She is the earth, the sky, the sun and moon
She is the sentience that pervades body and life.
Tamil Meaning:
மண்ணும், விண்ணுமாகிய எல்லா இடத்திலும், பகலும், இரவுமாகிய எல்லாக் காலத்திலும் வாழ்தலை யுடைய எல்லா உயிரும், அவற்றின் உணர்வுமாய் இருப்பது திருவைந்தெழுத்து. அதனால், எதனை வேண்டுவோரும் அந்த மந்திரத்தை ஓதலாம். ஓதுவதால் உலகில் பிறர் அறிந்திலாத விடய இன்பமும், இறை இன்பமும் மிகவும் உளவாம்.
Special Remark:
மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. \\\"அஞ்செழுத்து\\\" என்பது தாப்பிசையாய் இடைநின்றது. ஆனந்த ரூபம் - இன்பமே உருவாம் நிலை. இன்பம் இருவகை இன்பத்திற்கும் பொதுவாய் நின்றது. \\\"மதியதில்\\\" என்பதிலும் தொகுக்கப்பட்ட எண்ணும்மையை விரிக்க. ஊர்தல் - உலாவுதல்; வாழ்தல்.
இதனால், மேலதனை முடிந்தது முடித்தலாகக் கூறி, அது வலியுறுத்தப்பட்டது.
இம்மந்திரத்தின் பின் முன்பு \\\"ஆதார ஆதேயம்\\\" என்னும் அதிகாரத்துட் போந்த. \\\"உணர்ந்தெழு மந்திரம்\\\" என்னும் மந்திரம் சிறிது வேறுபடப் பதிப்புக்களில் காணப்படுதல் மிகையாகும்.