
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 11. சாம்பவி மண்டலச் சக்கரம்
பதிகங்கள்

ஆமே எழுத்தஞ்சும் ஆம்வழி யேஆகப்
போமே அதுதானும்? போம்வழி யேபோனால்
நாமே நினைத்தன செய்யலும் ஆகும்
பார்மேல் ஒருவர் பகையில்லை தானே.
English Meaning:
Proceed the Way of Five LettersThe Five Holy letters yours shall be
Persevere their Way,
If you so proceed,
You shall achieve all you wish
None the enemies,
In the World here below.
Tamil Meaning:
திருவைந்தெழுத்து எஞ்ஞான்றும் நன்மைக்கு ஏதுவாம் வழி உண்டாகவே செய்யும். அதனையே தெளிந்து வல்லாராதல் யாருக்குக்கூடும்! கூடுமாயின், நினைத்தவற்றை முடித்தல்கூடும். உலகில் நமக்குப் பகைவரும் இலாரவர்.Special Remark:
`ஆம் வழியே ஆக ஆம்` என முன்னே கூட்டி முடிக்க. போதல், மூன்றிடத்தும் `கைவருதல்` என்னும் பொருட்டு \\\"போமே\\\" என்பதில் ஏகாரம் வினாப் பொருளது. `தாமே` எனற்பாலதனை, \\\"நாமே\\\" எனத் தன்மையில் வைத்து ஓதினார். `ஒருவரது பகை` என ஆறாவது விரிக்க. `பகையும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage