ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 11. சாம்பவி மண்டலச் சக்கரம்

பதிகங்கள்

Photo

நாலைந் திடவகை உள்ளதோர் மண்டலம்
நாலுநல் வீதியுள் நந்நால் இலிங்கமா
நாலுநற் கோணமும் நண்ணால் இலிங்கமா
நாலுநற் பூநடு நண்ணல்அவ் வாறே.

English Meaning:
Sambhavi Chakra Formation

The Mandala is formed of
Lines twenty by twenty,
In Bhupuras, four describe Lingas
And Lingas four in corner each too
And place flowers four there.
Tamil Meaning:
இருபது அறைகளை உடைய ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிவட்டமாய் நிற்கும். நல்ல வீதிகள் நான்கிலும் திசைக்கு நான் காகப் பதினாறு இலிங்க உருவங்கள் இருக்க, நடுவில் உள்ள நான்கு அறை களிலும் அவ்வாறே நான்கு இலிங்கங்கள் நடுவில் உள்ள ஓர் இலிங்கத் துடன் நான்கு தாமரை மலர்களோடு நடுவொரு தாமரை மலரில் இருக்கும்.
Special Remark:
பெருந்திசை பற்றிப் பதினாறே கூறினும், கோணத்திசை நான்கிலும் நான்கு இலிங்கங்கள் கொள்க. நள் - நடு; இதனைக் கோணத்திற்கும் கூட்டி, `நள் நாலு கோணமும் நள் நால் இலிங்கமா` என்க. இதனானே, நடுவிலும் ஓர் இலிங்கம் இருத்தல் கொள்ளப்படும். இதனால், இலிங்கங்கள் அனைத்தும் இருபத்தைந்தாகும். இது சதாசிவமூர்த்தியே மாகேசுர மூர்த்தி தம் இருபத்தைந்து ஆதலை விளக்கும். \\\"அவ்வாறே\\\" என்பதனை, \\\"கோணமும்\\\" என்றதன் பின்னர்க் கூட்டுக. கோணமும் அவ்வாறே `நண்ணலையுடையது` என ஒரு சொல் வருவித்து முடிக்க.