ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 11. சாம்பவி மண்டலச் சக்கரம்

பதிகங்கள்

Photo

காணும் பொருளும் கருதிய தெய்வமும்
பேணும் பதியும் பெருகிய தீர்த்தமும்
ஊணும் உணர்வும் உறக்கமும் தானாகக்
காணுங் கனகமும் காரிகை யாமே.

English Meaning:
Blessings of Sambhavi

You shall attain wealth
Your favourite God you shall see,
Great state, holy waters of pilgrimage,
Delicious food, pleasant emotions,
And sound sleep, and gold
All these of themselves, yours be
As the Mother of the Chakra blesses.
Tamil Meaning:
ஐம்புல நுகர்ச்சியவாக உலகில் காணப்படுகின்ற பல பொருள்களும், நினைக்கின்ற பலதெய்வங்களை வழிபடுதல், போற்றப்படுகின்ற திவ்ய தலங்களில் வாழ்தல், பெருகி ஓடுகின்ற நதி முதலிய புண்ணிய தீர்த்தங்களில் மூழ்குதல் ஆகியவற்றால் வரும் பயன்களும் நுகர்ச்சியும் நல்ல அறிவும், கவலையற்ற உறக்கமும், எல்லாம் தானேயாய் நிற்கும் பொன்னும் ஆகிய எல்லாம் இச் சாம்பவி மண்டலச் சக்கர வழிபாட்டினால் கிடைக்கும்.
Special Remark:
\\\"தெய்வம்\\\" முதலிய மூன்றும் அவற்றால் ஆம் பயனைக் குறித்தன. பொன் உண்டாயின் எல்லாம் உளவாம்` என்பது பற்றி \\\"தானாகக்காணும் கனகம்\\\" என்றார். காரிகை - சாம்பவி; என்றது அவளுக்குரிய இச்சக்கரத்தை. `காரிகையால் ` என்னும் உருபு தொகுத்தலாயிற்று.
இவை இரண்டு மந்திரங்களாலும் சாம்பவி சக்கர வழிபாடு எல்லாப்பயனையும் தருதல் கூறப்பட்டது.