ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின்
    ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க
    வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
    வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே. 
  • 2. வேதம் உரைத்தானும் வேதிய னாகிலன்
    வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
    வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்கா
    வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே.
  • 3. இருக்குரு வாம்எழில் வேதத்தி னுள்ளே
    உருக்குணர் வாயுணர் வேதத்துள் ஓங்கி
    வெருக்குரு வாகிய வேதியர் சொல்லுங்
    கருக்குரு வாய்நின்ற கண்ணனு மாமே. 
  • 4. திருநெறி யாவது சித்தசித் தன்றிப்
    பெருநெறி யாய பிரானை நினைந்து
    குருநெறி யாஞ்சிவ மாநெறி கூடும்
    ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே. 
  • 5. ஆறங்க மாய்வரு மம்மறை ஓதியைக்
    கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லை
    வேறங்க மாக விளைவுசெய் தப்புறம்
    பேறங்க மாகப் பெருக்குகின் றாரே. 
  • 6. பாட்டும் ஒலியும் பரகுங் கணிகையர்
    ஆட்டும் அறாத அவனியின் மாட்டாதார்
    வேட்டு விருப்பார் விரதமில் லாதவர்
    ஈட்டும் இடஞ்சென் றிகலுற் றாரே.