ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. இலைநல வாயினும் எட்டி பழுத்தால்
    குலைநல வாங்கனி கொண்டுண லாகா
    முலைநலங் கொண்டு முறுவல்செய் வார்மேல்
    விலகுறு நெஞ்சினை வெய்துகொள் ளீரே. 
  • 2. மனைபுகு வார்கள் மனைவியை நாடில்
    சுனைபுகு நீர்போற் சுழித்துடன் வாங்கும்
    கனவது போலக் கசிந்தெழும் இன்பம்
    நனவது போலவும் நாடவொண் ணாதே. 
  • 3. இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர்
    புயனுறப் புல்லிப் புணர்ந்தவர் எய்தும்
    மயலுறும் வானவர் சார்விது என்பார்
    அயலுறப் பேசி அகன்றொழிந் தாரே. 
  • 4. வையகத் தேமட வாரொடுங் கூடியென்
    மெய்யகத் தோருளம் வைத்த விதியது
    கையகத் தேகரும் பாலையின் சாறுகொள்
    மெய்யகத் தேபெறு வேம்பது வாமே. 
  • 5. கோழை ஒழுக்கங் குளமூடு பாசியில்
    ஆழ நடுவார் அளப்புறு வார்களைத்
    தாழத் துடக்கித் தடுக்ககில் லாவிடில்
    பூழை நுழைந்தவர் போகின்ற வாறே. 
  • 6. கொலையே களவுகள் காமம் பொய்கூறல்
    மலைவான பாதக மாம்அவை நீக்கத்
    தலையாம் சிவனடி சார்ந்தின்பஞ் சார்ந்தோர்க்
    கிலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே.