ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. சீவன் எனச்சிவன் என்னவெவ் வேறில்லை
    சீவ னார்சிவ னாரை யறிகிலர்
    சீவ னார்சிவ னாரை அறிந்தபின்
    சீவ னார்சிவ னாயிட் டிருப்பரே.
  • 2. குணவிளக் காகிய கூத்தப் பிரானும்
    மனவிளக் காகிய மன்னுயிர்க் கெல்லாம்
    பணவிளக் காகிய பஃறலை நாகம்
    கணவிளக் காகிய கண்காணி யாமே.
  • 3. அறிவாய் அறியாமை நீங்கி யவனே
    பொறிவாய் ஒழிந்தெங்கும் தான்ஆன போதன்
    அறிவாய் அவற்றினுள் தான்ஆய் அறிவன்
    செறிவாகி நின்றஅச் சீவனும் ஆகுமே.
  • 4. ஆறாறின் தன்மை அறியா திருந்தேனுக்கு
    ஆறாறின் தன்மை அறிவித்தான் பேர்நந்தி
    ஆறாறின் தன்மை அருளால் அறிந்தபின்
    ஆறாறுக் கப்புற மாகிநின் றானே.
  • 5. சிவமா கியஅருள் நின்றறிந் தோரார்
    அவமாம் மலம்ஐந்தும் ஆவதறியார்
    தவமான செய்து தலைப்பறி கின்றார்
    நவமான தத்துவம் நாடகி லாரே.
  • 6. நாடொறும் ஈசன் நடத்து தொழில் உன்னார்
    நாடொறும் ஈசன் நயந்தூட்டல் நாடிடார்
    நாடொறும் ஈசன்நல் லோர்க்கருள் நல்கல்தான்
    நாடொறும் நாடார்கள் நாள்வினை யாளரே.