
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 31. போதன்
பதிகங்கள்

குணவிளக் காகிய கூத்தப் பிரானும்
மனவிளக் காகிய மன்னுயிர்க் கெல்லாம்
பணவிளக் காகிய பஃறலை நாகம்
கணவிளக் காகிய கண்காணி யாமே.
English Meaning:
Lord is LightThe Dancing Lord is the Light Benevolent,
He is the Joyous Light for Creation all;
He adorns the many hooded serpent with gemlike shining eyes
He is the Cluster of Lights that oversees all.
Tamil Meaning:
எண்குணங்களையுடைய கூத்தப்பிரான், மனத்தை விளக்காகக் கொண்டு பொருள்களை அறிந்து வருகின்ற, நிலைபெற்ற உயிர்களுக்கெல்லாம், படந்தோறும் மணியாகிய விளக்கினையுடைய பலதலைப் பாம்புபோலவும், இரவிலும் பல விளக்குக்களை ஏற்றி வைத்துக் கொண்டு பொருள்களைக் காவல் செய்கின்ற கண்காணி போலவும் இருக்கின்றான்.Special Remark:
எனவே `சீவனார் ஒரு பொழுதும் சிவனாரை அறியா விடினும், சிவனார் சீவனாரை எப்பொழுதும் அறிந்து கொண்டே யிருக்கின்றார்` என்பதாம். `ஆகவே அவரை அறியச் சீவனார் ஆவன செய்தல் வேண்டும்` என்றபடி. `சிவன் இயல்பாகவே பாசங்கள் இன்மை, இயற்கையுணர்வு, முற்றுணர்வு என்னும் குணங்களை உடையன் ஆதலின் அவன் தனக்கு அறிவிக்கும் துணையை வேண்டாது தானே எல்லாவற்றையும் அறிவான்` என்றற்கு, ``குண விளக்காகிய கூத்தப்பிரான்`` என்றும், வேறொரு விளக்கை வேண்டாது தனது மணிகளாகிய விளக்கினாலே விளக்கத்தைத் தரும் பல தலைப் பாம்பு போல உயிர்கட்குத் தான் அறிவைத் தருகின்றான்` என்றும், `உயிர்களை இமைப்பொழுதும் நீங்காது காண்கின்ற கண் காணியாய் உள்ளான்` என்றும் கூறினார். ``மன்னுயிர்க்கு`` என்னும் நான்கன் உருபு, `கரும்பிற்கு வேலி` என்பது போல, அதற்கு வினை யுடைமைப் பொருளில் வந்தது. `தான் தோன்றி` என்பது `தானே தோன்றுதலையுடையவன்` எனப்பொருள் தருதல் போல, `கண் காணி` என்பது `கண் காணுதலையுடையவன்` எனப் பொருள் தந்தது. ``ஆகும்`` என்பதை நாகத்திற்கும் கூட்டுக. ஆக்கம் உவமை குறித்து நின்றது. இரண்டாம் அடி இன எதுகை.இதனால், சிவன் சீவனை எப்பொழுதும் அறிந்து கொண்டே யிருத்தலால் உரிய பொழுதில் அவன் சீவனுக்கு வெளிப்பட்டு அருளச் சீவன் என்பது போதனாம் என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage