ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 31. போதன்

பதிகங்கள்

Photo

அறிவாய் அறியாமை நீங்கி யவனே
பொறிவாய் ஒழிந்தெங்கும் தான்ஆன போதன்
அறிவாய் அவற்றினுள் தான்ஆய் அறிவன்
செறிவாகி நின்றஅச் சீவனும் ஆகுமே.

English Meaning:
Lord is Knowledge and Knower

He is all Knowledge, immune from Ignorance,
Without aid of sensory organs, He is self-Illumined,
Himself as Knowledge and Himself as the Knower too
He is the Jiva as well,
He stands pervading all.
Tamil Meaning:
சிவன் அறியாமையோடு விரவாது அறிவாயே இருப்பவன். அவன் சீவன்களின் அறிவில் பொருந்திச் சீவர்கள் அறிவனவற்றையெல்லாம் தான் உடனாய்நின்று அறிவன். அதனால் அவன் சீவன்களாகியும் இருப்பான். ஆகையால் இந்நிலையை உணர்கின்ற சீவன் தானும் அச்சிவனேயாய் நிற்கும் ஆதலால், அத்தகைய சீவனே யாதும் அறியாத இருள் நிலையும், பொறிகளின் வழிப்பட்டு உலகை ஏகதேசமாய் அறிகின்ற மருள் நிலையும் ஆகிய இவற்றினின்றும் நீங்கிச் சிவனைப் போல எங்கும் வியாபகமாய் நின்று அறியும் நிலையை எய்தி, `போதன்` எனப்படுவதாகும்.
Special Remark:
மூன்றாம் அடிமுதலாகத் தொடங்கி உரைக்க. பின் இரண்டு அடிகளால் சீவன் வியாபக நிலையை எய்திப் போதனாவதற் குரிய இயைபு கூறப்பட்டது. அவற்றுள் ``அறிவாய் அறிவன், சீவனு மாகும்`` என்னும் பயனிலைகட்கு, `சிவன் என்னும் எழுவாய் வருவிக்க. ``சீவனும் ஆகும்`` என்றதனால், `அவ்வாறு ஆகின்றவன் சிவன்` என்பது தானே அமைந்தது. அலவன், கலுழன், கடுவன் முதலியன போல, `சீவன்` என்பது அஃறிணைப் பெயர். அவைகளைச் சுட்டிய ``அவற்றினுள்`` என்பது செய்யுளாகலின் முன் வந்தது. வேறு தொடராய் நிற்றலால் ``நீங்கியவன், போதன்`` என்பன திணை வழு ஆகாமை அறிக.
இதனால், சீவன் போதனாதற்குரிய இயையும், போதனார் நிலையது இயல்பும் கூறப்பட்டன.