ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. விச்சுக் கலமுண்டு வேலிச்செய் ஒன்றுண்டு
    உச்சிக்கு முன்னே உழவு சமைந்தது
    அச்சங்கெட் டச்செய் அறுத்துண்ண மாட்டாதார்
    இச்சைக்குப் பிச்சை இரக்கின்ற வாறே.
  • 2. பிச்சைய தேற்றான் பிரமன் தலையினில்
    பிச்சைய தேற்றான் பிரியா தறஞ்செய்யப்
    பிச்சைய தேற்றான் பிரமன் சிரங்காட்டிப்
    பிச்சைய தேற்றான் பிரான்பர மாகவே.
  • 3. பரந்துல கேழும் படைத்த பிரானை
    `இரந்துணி` என்பர் எற்றுக் கிரக்கும்
    நிரந்தர மாக நினையும் அடியார்
    இரந்துண்டு தன்கழல் எட்டச் செய்தானே.
  • 4. வரஇருந் தான்வழி நின்றிடும் ஈசன்
    தரஇருந் தான்தன்னை நல்லவர்க்கு இன்பம்
    பொரஇருந் தான் புகலே புகலாக
    அரவிருந் தால்`அறி யான்`என்பது ஆமே
  • 5. அங்கார் பசியும் அவாவும் வெகுளியும்
    தங்கார் சிவனடி யார்சரீ ரத்திடைப்
    பொங்கார் புவனத்தும் புண்ணிய லோகத்தும்
    தங்கார் சிவனைத் தலைப்படு வாரே.
  • 6. மெய்யக ஞானம் மிகத்தெளிந் தார்களும்
    கையகம் நீட்டார் கடைத்தலைக் கேசெல்லார்
    ஐயம் புகாமல் இருந்த தவசியர்
    வையக மெல்லாம் வரஇருந் தாரே.