ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 16. பிட்சா விதி

பதிகங்கள்

Photo

பரந்துல கேழும் படைத்த பிரானை
`இரந்துணி` என்பர் எற்றுக் கிரக்கும்
நிரந்தர மாக நினையும் அடியார்
இரந்துண்டு தன்கழல் எட்டச் செய்தானே.

English Meaning:
Why Devotees Beg

The Lord who the seven worlds created
A beggar they call Him?
Why, though, He begs?
That the holy devotees
Who constant think of Him,
Beg and reach His Feet.
Tamil Meaning:
சிவபெருமானை உலக முதல்வனாக உணரா தவர்கள் அவன் இரத்தலை மட்டுமே நோக்கி அது பற்றி இகழ்ந் தொழிவர். அவர்கள் போலன்றி அவனை உலக முதல்வனாக உணர் பவர், `சிவன் ஏன் இரக்கவேண்டும்`என ஆழ்ந்து நோக்குவர். அங் ஙனம் நோக்குவார்க்கு, `அவன் அடியவர் உலகியலில் ஈடுபடாது பசி நீங்குதல் மாத்திரைக்குத்தன் செயலைப் போலவே இரந்து உண்டு முடிவில் தனது திருவடியடையும் செயலைப் போலவே இரந்து உண்டு முடிவில் தனது திருவடியடையும் நோக்குத் தப்பாது நிறைவெய்துதற் பொருட்டாம்` என்பது விளங்கும்.
Special Remark:
எனவே, `சிவனடியார் இரத்தலைச் செய்தல் திருவருள் வழி நிகழ்வதாம்` என்றபடி.