ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. நனவாதி மூன்றினில் சீவ துரியம்
    தனதாதி மூன்றில் பரதுரி யந்தான்
    நனவாதி மூன்றில் சிவதுரி யம்மாம்
    இனவாகும் தொம்தத் அசிபதத் தீடே.
  • 2. தானாம் நனவில் துரியம் தன் தொம்பதம்
    தானாம் துரிய நனவாதி தான்மூன்றில்
    ஆனாப் பரபதம் அற்ற(து) அருநனா
    வானான மூன்று துரியத் தணுகுமே.
  • 3. அணுவின் துரியத்து நான்கும்அ தாகிப்
    பணியும் பரதுரி யம்பயில் நான்கும்
    தணிவில் பரமாகிச் சார் முத் துரியக்
    கணுவிரு நான்கும் கலந்தஈ ரைந்தே.
  • 4. ஈரைந் தவத்தை யிசைமுத் துரியத்துள்
    நேரந்த மாக நெறிவழி யேசென்று
    பாரந்த மான பராபரத் தைக்கியத்(து)
    ஓரந்த மாயீ ருபாதியைச் சேத்ந்திடே.
  • 5. தொட்டே யிருமின் துரிய நிலத்தினை
    எட்டா தெனினும் நின் றெட்டும் இறைவனைப்
    பட்டாங் கறிந்திடில் பல்நா உதடுகள்
    தட்டா தொழிவதோர் தத்துவந் தானே.
  • 6. அறிவாய் அசத்தென்னும் ஆறா றகன்று
    செறிவாய மாயை சிதைத்(து) அரு ளாலே
    பிறயாத பேரரு ளாயிடும் பெற்றி
    நெறியான அன்பர் நிலையறிந் தாரே.
  • 7. நனவில் நனவாதி நாலாம் துரியம்
    தனதுயிர் தொம்பதம் ஆமாறு போல
    வினையறு சீவன் நனவாதி யாகத்
    தனைய பரதுரி யம்தற் பதமே.
  • 8. தொம்பதம் தற்பதம் சொல்முத் துரியம்போல்
    நம்பிய மூன்றாம் துரியத்து நற்பரம்
    அம்புவி உன்னா அதிசூக்கம் அப்பாலைச்
    செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.