ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 22. முத்துரியம்

பதிகங்கள்

Photo

நனவாதி மூன்றினில் சீவ துரியம்
தனதாதி மூன்றில் பரதுரி யந்தான்
நனவாதி மூன்றில் சிவதுரி யம்மாம்
இனவாகும் தொம்தத் அசிபதத் தீடே.

English Meaning:
Three Turiyas—Jiva, Para and Siva; and Their
Respective Reaches Tvam Pada, Tat Pada and Asi Pada

The Turiya beyond (in Jagrat)
Waking, Dreaming and Deep Sleep States
Is Jiva Turiya;
The Turiya beyond
The Waking, Dreaming and Deep Sleep States (in the Jiva Turiya State)
In Para Turiya;
The Turiya further beyond (in the Para Turiya State)
Is Siva Turiya;
In these are reached
Tvam, Tat and Asi States respective.
Tamil Meaning:
[ஆன்மா, `சீவன்` எனப்படுவது பாசநிலையில் ஆகலின், முதற்கண் சொல்லப்பட்ட நனவு, சகலத்தில் கேவலமாய் நிகழும். கீழாலவத்தையிலும், சகலத்தில் சகலமாய் நிகழும் மத்தியாலவத்தையிலும் நிகழும் நனவுகளாம்.] கீழாலவத்தையில் நிகழும் சாக்கிரம் முதலியவற்றில் நிகழும் துரியம் ஆணவ அனுபவம் மிகுவது ஆதலாலும், மத்தியாலத்தையில் நிகழும் சாக்கிரம் முதலிய வற்றில் நிகழும். துரியம் ஐம்புல அனுபவம் மிகுவது ஆதலாலும் அவையிரண்டும் சீவ துரியமாம். (இவை தொடக்கத்தில் நிகழ்வன. மேலாலவத்தையாகிய யோக துரியமும் சீவதுரியமே) இறுதியில் நிகழும் பராவத்தையில் நிகழும் சாக்கிரம் முதலியவற்றில் நிகழும் துரியத்தில் உயிர் பாசப்பற்று இன்றிப் பரம்பொருள் அனுபவமே மிகப் பெற்றிருத்தலால் அது பர துரியமாம். (`இஃது இலய முத்திநிலை` என்பது மேலே குறிப்பிடப்பட்டது.) இடையில் மத்தியாலவத்தைக்கு மேல் நிகழும் மேலாலவத்தையாகிய யோகாவத்தையில் நிகழும் சாக்கிரம் முதலியவற்றில் நிகழும் துரியமும், நின்மல சாக்கிரம் முதலியவற்றில் நிகழும் துரியமும் உலகியல் உணர்வு முற்ற நீங்காத நிலையில் சிவானுபவம் மிகப் பெறுவன ஆதலின் அவை பரதுரியம் ஆகாது சிவதுரியமாம். இவற்றுள் சிவதுரியமும், பர துரியமுமே `தத்துவமசி` மகா வாக்கிய அனுபவங்களாம்.
Special Remark:
தனது - பரம் பொருளினது. இன - இன்ன `இவை` என்றபடி `இவை` என்பது அண்மைச் சுட்டாகலின், அது பின்னிரண்டு துரியங்களையே குறித்தது. பதத்து ஈடு - பத அனுபவத்தில் இடுவன.
இதனால், `முத்துரியங்களாவன இவை` எனச் சுட்டியும், விளக்கியும் கூறப்பட்டது.