ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 22. முத்துரியம்

பதிகங்கள்

Photo

தானாம் நனவில் துரியம் தன் தொம்பதம்
தானாம் துரிய நனவாதி தான்மூன்றில்
ஆனாப் பரபதம் அற்ற(து) அருநனா
வானான மூன்று துரியத் தணுகுமே.

English Meaning:
States of Consciousness in the Three Turiyas

In Jiva Turiya of Waking State
Is Tvam-Pada;
The end of Jiva Turiya is the beginning of Para Turiya
Jagrat;
At the end of Para Turiya
Is Para Pada (Tat-Pada)
Three steps beyond,
In the fourth, is Siva Turiya (Asi Pada).
Tamil Meaning:
சீவன் சீவனாகவே இருக்கின்ற மத்தியாலவத்தைச் சாக்கிரம் முதலியவற்றில் நிகழும் துரியத்தில் ஆன்மா, `துவம்` பதப் பொருளாய் இருக்கும். ஆன்மாச் சிவமாந்தன்மையைப் பெறுகின்ற நின்மல சாக்கிரம், பராசாக்கிரம் முதலியவற்றில் நிகழ்கின்ற துரியங்களில் ஆன்மா சிவமாகி, `தத்` பொருளாய் இருக்கும். ஆகவே, இவ்விரு துரியங்களிலும் ஆன்மாப் பாசம் அற்றதாம். சகலத்தில் கேவலத்திற்கு மேலாக நிகழும் மூன்று துரியங்களிலும் ஆன்மா இவ்வாறான நிலைகளை அடையும்.
Special Remark:
``தான்`` மூன்றில் முன்னது சீவனையும் ஏனையவை பரத்தையும் உணர்த்தின. ``தான்மூன்றில்`` என்பதை `மூன்றில் தான்` என மாற்றியுரைக்க. ``அரு நனா`` என்றது, எளிதில் இயல்பாக நிகழாது அரிய திருவருளால் நிகழ்வது என நின்மல சாக்கிர பரசக்கிரங்களைக் குறித்தன. ``அருநனாவான்`` என்னும் மூன்றன் உருபை ஏழன் உருபாகத்திரித்துக் கொள்க. ``காலத்தினாற் செய்த நன்றி``l என்பதிற் போல,
இதனால், `முத்துரியங்களுள் சீவ துரியம் பெத்த துரியமும் ஏனைய துரியங்கள் முத்திதுரியமும் ஆம்` என்பது கூறப்பட்டது.