ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. ஓடவல் லார்தம ரோடு நடாவுவன்
    பாடவல் லாரொலி பார்மிசை வாழ்குவன்
    தேடவல் லாரொலி பார்மிசை வாழ்குவன்
    கூடவல் லாரடி கூடுவன் யானே. 
  • 2. தாமிடர்ப் பட்டுத் தளிர்போல் தயங்கினும்
    மாமனத் தங்கன்பு வைத்த திலையாகும்
    நீயிடர்ப்பட்டிருந் தென்செய்வாய் நெஞ்சமே
    போமிடத் தென்னொடும் போதுகண் டாயே. 
  • 3. அறிவார் அமரர் தலைவனை நாடிச்
    செறிவார் பெறுவர் சிவதத் துவத்தை
    நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும்
    பெரியா ருடன் கூடல் பேரின்ப மாமே.
  • 4. தாழ்சடை யான்றன் தமராய் உலகினிற்
    போர்புக ழால்எந்தை பொன்னடி சேருவார்
    வாயடையா உள்ளந் தேர்வார்க் கருள்செய்யுங்
    கோவடைந் தந்நெறி கூடலு மாமே. 
  • 5. உடையான் அடியார் அடியா ருடன்போய்ப்
    படையா ரழலான் பதிசென்று புக்கே
    கடையார நின்றவர் கண்டறி விப்ப
    உடையான் வருகென ஓலமென் றாரே. 
  • 6. அருமைவல் லான்கலை ஞானத்துள் தோன்றும்
    பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்தும்
    உரிமைவல் லோன் உணர்ந் துழி யிருக்கும்
    திருமைவல் லாரொடு சேர்ந்தனன் யானே.