ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 25. பெரியாரைத் துணைக்கோடல்

பதிகங்கள்

Photo

அறிவார் அமரர் தலைவனை நாடிச்
செறிவார் பெறுவர் சிவதத் துவத்தை
நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும்
பெரியா ருடன் கூடல் பேரின்ப மாமே.

English Meaning:
The Jnanis seek the Lord of Celestials;
They who seek the Company of Jnanis
Will attain Siva Truth;
They indeed Walk in the Path of Virtue
And are truly blessed;
To resort to such
Is indeed Bliss Supreme.
Tamil Meaning:
அறிவுடைய பெரியோர், தேவர்க்குத் தலைவ னாகிய சிவபிரானை அடையும் வழிகளை யெல்லாம். ஆராய்ந்து; அவற்றானே அவனை அடைவர். பின்னர் அவனேயாய் நிற்பர், ஆதலின், தாமும் நன்னெறியில் உறைத்துநின்று, பிறரையும் அவ்வாறு நிற்கச்செய்து உலகிற்கு நயம்புரிகின்ற பெரியாருடன் கூடுதலே பேரின்பம் எய்துவதற்கு வழியாகும்.
Special Remark:
`அறிவார் செறிவார்` எனவும், `நெறி நின்று` எனவும் இயையும். `ஆதலின்` என்பது சொல்லெச்சம். பேரின்பத்தைத் தருவதனைப் பேரின்பம் என்றார்.
இதனால், பெரியாரைத் துணைக்கோடல் பேரின்பத்தைத் தருதல் காரணத்துடன் கூறப்பட்டது.