ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று
    வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல
    அம்பவழ் மேனி அறுமுகன் போய்அவர்
    தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.
  • 2. அண்டமொ டெண்டிசை தாங்கும் அதோமுகம்
    கண்டங் கறுத்த கருத்தறி வாரில்லை
    உண்டது நஞ்சென் றுரைப்பர் உணர்விலோர்
    வெண்டலை மாலை விரிசடை யோற்கே. 
  • 3. செய்தான் அறியுஞ் செழுங்கடல் வட்டத்துப்
    பொய்யே யுரைத்துப் புகழும் மனிதர்கள்
    மெய்யே யுரைக்கில்அவ் விண்ணோர்தொழச் செய்வன்
    மைதாழ்ந் திலங்கு மணிமிடற் றோனே. 
  • 4. நந்தி எழுந்து நடுவுற ஓங்கிய
    செந்திக் கலந்துட் சிவனென நிற்கும்
    உந்திக் கலந்தங் குலகம் வலம்வரும்
    அந்தி இறைவன் அதோமுக மாமே. 
  • 5. அதோமுகங் கீழண்ட மான புராணன்
    அதோமுகந் தன்னொடும் எங்கும் முயலும்
    சதோமுகத் தொண்மலர்க் கண்ணிப் பிரானும்
    சதோமுகன் ஊழித் தலைவனு மாமே.
  • 6. அதோமுக மாமல ராயது கேளும்
    அதோமுகத் தாலொரு நூறாய் விரிந்து
    அதோமுக மாகிய அந்தமில் சத்தி
    அதோமுக மாகி அமர்ந்திருந் தானே.