ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 3. பிரணவ சமாதி

பதிகங்கள்

Photo

மலையுமனோ பாவம் மருள்வன வாவ
நிலையின் தரிசனம் தீப நெறியாம்
தலமும் குலமும் தவம் சித்த மாகும்
நலமும் சன் மார்க்கத் துபதேசந் தானே.

English Meaning:
Great Teaching of Sanmarga

My despairing thoughts
Are in confusion thrown;
The steady thoughts
Lead to vision clear of Light Divine;
The steadfast mind
Is the place, environs and devotion appropriate;
Great indeed is Upadesa (teaching) of Sanmarga (Jnana).
Tamil Meaning:
தன்னறிவாலே தனக்குள் தோன்றும் மலைவுகள் எல்லாம் தெளிவைத் தாராது. மேலும், மேலும் மயக்கத்தையே தரும், இருள் நெறிகளேயாகும். ஆகையால், ஞான குருவின் தரிசனமே நிலையான உணர்வைத் தருகின்ற ஒளி நெறியாம். ஆகவே, தவத்திற் குரிய புண்ணியத் தலங்களும், அங்குள்ள தவத்தோர் கூட்டங்களும், அவரோடு கூடி ஒழுகுகின்ற தவ ஒழுக்கமாகிய நன்மையும் எல்லாம் நன்னெறியை உணர்த்துகின்ற நல்லாசிரியரது உபதேசமே.
Special Remark:
உபதேசத்தின் வழிபட்டனவற்றை `உபதேசம்` என உபசரித்துக் கூறினார். நல்லாசிரியர்தம் உபதேச வழிபட்ட பொழுதே புண்ணியத் தலம் முதலியன உண்மைப் புண்ணியத் தலம் முதலியனவாம்` என்றபடி. `அவற்றைத் தன்னறிவளவிலே தான் அறிந்து கைக்கொள்ளுதல் பயனுடைத் தாகாது` என்பதாம். இங்ஙனம் கூறுமுகத்தானே, `பிரணவ யோகமும் உபதேச முறையான் உணர்ந்து மேற்கொள்ளற்பாலது` என்பது உணர்த்திய வாறு, `சித்தம் தவம் ஆகும் நலம்` என மாற்றிக் கொள்க. தவம் - தவ விருப்பம்.
இதனால், `உண்மைப் பிரணவ யோகம் இன்னது` என்பது கூறப்பட்டது.