ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 3. பிரணவ சமாதி

பதிகங்கள்

Photo

ஓங்காரத் துள்ளே உதித்தஐம் பூதமும்
ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம்
ஓங்காரா தீதத்(து) உயிர்மூன்றும் உற்றன
ஓங்கார சீவன் பரசிவ னாகுமே.

English Meaning:
In Aum Jiva, Para and Siva Merge

In Aum arose the elements five;
In Aum arose the creation entire;
In the atita (finite) of Aum
The three Jivas merged;
Aum is the Form
Of Jiva, Para and Siva in union.
Tamil Meaning:
பஞ்ச பூதம் முதலிய தத்துவங்களும் அவற்றின் காரியங்களாகிய பலவகை உடம்புகளும் பிரணவத்திலிருந்தே தோன்றின. பிரணவமாகிய அதற்கு அப்பால் உள்ளன மூவகை உயிர்கள், ஆகவே பிரணவமே வடிவான உயிரை, `பரசிவன்` என்றே சொல்லலாம்.
Special Remark:
``உள்`` இரண்டிலும் `நின்று` என்பது வருவிக்க சொல்லாலன்றிப் பொருள்கள் பற்றி `விளங்கிய ஞானம்`3 உண்டாதல் கூடாமை பற்றிச் சொற்களையே பொருளாகக் கூறும் முறை பற்றி அச்சொற்கள் அனைத்திற்கும் மூலமான பிரணவத்தினின்றே பொருள்கள் பலவும் தோன்றினவக்கா கூறினார். எனினும் சித்தாகிய உயிர்கள் ஓங்காரத்திற்கு வேறாதல் பற்றி `அவை ஓங்காரத்திற்கு அப்பால் உற்றன` என்றும், பிரணவத்தைச் செலுத்தி நிற்பது சிவ சத்தியேயாகலின் `பிரணவ வடிவான உயிரை, சிவன் என்றல் கூடும்` என்றும் கூறினார்.
``மூவகை அணுக்களுக்கும் முறைமையால் விந்து ஞானம்
மேவின தில்லை யாகில் விளங்கிய ஞானம் இன்றாம்,
ஓவிட விந்து ஞானம் உதிப்பதோர் ஞானம் உண்டேல்,
சேவுயர் கொடியி னான்றன் சேவடி சேர லாமே``.
என்னும் சிவஞான சித்தயைக் காண்க.9 இதனால் உயிர் தன்னை உணர்தல் பிரணவ யோகத்தின் வழியாதல் விளங்கும்.
இதனால் பிரணவத்தின் சிறப்பும், `அதன்வழித்தான யோகத்தால் உயிர் தன்னை உணர்ந்து, தலைவனையும் உணரும்` என்பதும் கூறப்பட்டன.