ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும்
    சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி
    சமாதி யமாதியிற் றங்கினோர்க் கன்றே
    சமாதி யமாதி தலைப்படுந் தானே.
  • 10. கற்பனை யற்றுக் கனல்வழி யேசென்று
    சிற்பனை எல்லாஞ் சிருட்டித்த பேரொளிப்
    பொற்பனை நாடிப் புணர்மதி யோடுற்றுத்
    தற்பர மாகத் தகுந்தண் சமாதியே. 
  • 11. தலைப்பட் டிருந்திடத் தத்துவங் கூடும்
    வலைப்பட் டிருந்திடும் மாதுநல் லாளும்
    குலைப்பட் டிருந்திடும் கோபம் அகலும்
    துலைப்பட் டிருந்திடந் தூங்கவல் லார்க்கே. 
  • 12. சோதித் தனிச்சுட ராய்நின்ற தேவனும்
    ஆதியும் உள்நின்ற சீவனு மாகுமால்
    ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும்
    ஆதி அடிபணிந் தன்புறு வாரே. 
  • 13. சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகம்
    சமாதிகள் வேண்டா இறையுட னேகில்
    சமாதிதா னில்லை தானவ னாகில்
    சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே. 
  • 2. விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடிற்
    சந்தியி லான சமாதியிற் கூடிடும்
    அந்த மிலாத அறிவின் அரும்பொருட்
    சுந்தரச் சோதியுந் தோன்றிடுந் தானே. 
  • 3. மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
    மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை
    மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு
    மன்மனத் துள்ளே மனோலய மாமே. 
  • 4. விண்டலர் கூபமும் விந்தத் தடவியுங்
    கண்டுணர் வாகக் கருதி யிருப்பர்கள்
    செண்டு வெளியிற் செழுங்கிரி யத்திடை
    கொண்டு குதிரை குசைசெறுத் தானே. 
  • 5. மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு
    கொண்டிட நிற்குங் குடிகளும் ஆறெண்மர்
    கண்டிட நிற்குங் கருத்து நடுவாக
    உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே.
  • 6. பூட்டொத்து மெய்யிற் பொறிப்பட்ட வாயுவைத்
    தேட்டற்ற அந்நிலஞ் சேரும் படிவைத்து
    நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத்
    தோட்டத்து மாம்பழந் தூங்கலு மாமே. 
  • 7. உருவறி யும்பரி சொன்றுண்டு வானோர்
    கருவரை பற்றிக் கடைந்தமு துண்டார்
    அருவரை யேறி அமுதுண்ண மாட்டார்
    திருவரை யாமனந் தீர்ந்தற்ற வாறே. 
  • 8. நம்பனை ஆதியை நான்மறை ஓதியைச்
    செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை
    அன்பினை யாக்கி அருத்தி ஒடுக்கிப்போய்க்
    கொம்பேறிக் கும்பிட்டுக் கூட்டமிட் டாரே. 
  • 9. மூலத்து மேலது முற்சது ரத்தது
    காலத் திசையிற் கலக்கின்ற சந்தினில்
    மேலைப் பிறையினில் நெற்றிக்குநேர் நின்ற
    கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே.