ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை
    அடையப்பட் டார்களும் அன்பில ரானார்
    கொடையில்லை கோளில்லை கொண்டாட்ட மில்லை
    நடையில்லை நாட்டில் இயங்குகின் றார்கட்கே. 
  • 2. பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருதென்
    றக்குழி தூர்க்கும் அரும்பண்டந் தேடுவீர்
    எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின்
    அக்குழி தூரும் அழுக்கற்ற போதே.
  • 3. கற்குழி தூரக் கனகமுந் தேடுவர்
    அக்குழி தூர்க்கையா வர்க்கும் அரியதே
    அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின்
    அக்குழி தூரும் அழுக்கற்ற வாறே. 
  • 4. தொடர்ந்தெழு சுற்றம் வினையினுந் தீய
    கடந்ததோர் ஆவி கழிவதன் முன்னே
    உடந்தொரு காலத் துணர்விளக் கேற்றித்
    தொடர்ந்துநின் றவ்வழி தூர்க்கலு மாமே. 
  • 5. அறுத்தன ஆறினும் ஆனின மேவி
    இறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம்
    ஒறுத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வை
    வெறுத்தனன் ஈசனை வேண்டிநின் றேனே.