ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Paadal

  • 1. அறிந்த பிரதமையோ டாறும் அறிந்து
    அறிந்த அச்சத்தமி மேலவை குற்ற
    அறிந்தவை ஒன்றுவிட் டொன்றுபத் தாக
    அறிந்த வலமது வாக நடத்தே.
  • 2. நடந்த வயிரவன் சூல கபாலி
    கடந்த பகைவனைக் கண்ணது போக்கித்
    தொடர்ந்த உயிரது உண்ணும் பொழுது
    படர்ந்த உடல்கொடு பந்தாடல் ஆமே.
  • 3. ஆமேவப் பூண்டருள் ஆதி வயிரவன்
    ஆமே கபாலமும் சூலமும் கைக்கொண்டங்கு
    ஆமே தமருக பாசமும் கையது
    ஆமே சிரத்தொடு வாளது கையே.
  • 4. கையவை ஆறும் கருத்துற நோக்கிடு
    மெய்யது செம்மை விளங்கு வயிரவன்
    துய்ய ருளத்தில் துலங்குமெய் உற்றத்தாப்
    பொய்வகை விட்டுநீ பூசனை செய்யே.
  • 5. பூசனை செய்யப் பொருந்திஓர் ஆயிரம்
    பூசனை செய்ய அதுஉடன் ஆகுமால்
    பூசனை சாந்துசவ் வாது புழுகுநெய்
    பூசனை செய்துநீர் பூசலை வேண்டுமே.
  • 6. வேண்டிய வாறு கலகமும் ஆயிடும்
    வேண்டிய ஆறினுள் மெய்யது பெற்றபின்
    வேண்டிய ஆறு வரும்வழி நீநட
    வேண்டிய வாறது வாகும் கருத்தே.