ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 10. வயிரவச் சக்கரம்

பதிகங்கள்

Photo

கையவை ஆறும் கருத்துற நோக்கிடு
மெய்யது செம்மை விளங்கு வயிரவன்
துய்ய ருளத்தில் துலங்குமெய் உற்றத்தாப்
பொய்வகை விட்டுநீ பூசனை செய்யே.

English Meaning:
Adore Bhairava Sincerely

Six His hands,
Blessed His look,
Ruddy Bright is Bhairava`s Form
He appears in the hearts of the Pure
As shining Truth;
Do in devotion sincere adore Him.
Tamil Meaning:
ஆறுகைகளும் நெஞ்சில் விளங்கும் படி நினைக்கப் படுகின்ற திருமேனி செந்நிறம் உடையதாக விளங்குகின்ற வயிரவ மூர்த்தியினது, தூயவர் உள்ளத்தில் துலங்கி நிற்பதாகிய வடிவம், உனது நெஞ்சிலும் உள்ளதாகக் கருதி, மாணவகனே, நீ வஞ்சனை யற்ற, மெய்யான அன்போடு அக்கடவுளை வழிபடுதலைச் செய்.
Special Remark:
`செய்தால் பகைவரை அழிக்கும் பயன் உனக்குக் கிட்டுவதாகும்` என்பது குறிப்பெச்சம். பொய் - வஞ்சனை. அஃதாவது உறுதிப்பாடு இன்மை. மேலே குறிப்பால் உணர்த்திய வயிரவ மூர்த்தி ஆறு கைகளை உடையவர் என்பது இங்கு வெளிப்படையாக உணர்த்தப்பட்டது. இதனை, இந்நூலாற் பெறுதும். பெறவே, மேற்கூறிய படைக்கலம் முதலியவைகளில் சூலம், தமருகம், வாள் என்பன வலக்கைகளிலும், பாசம், கபாலம், வெட்டப்பட்ட தலை என்பன இடக்கைகளிலும் இருத்தல் புலனாகும்; தலையும், கபாலமும் பிரமனுடையனவே. அவை முறையே தலையைக் கிள்ளினமையை யும், அதன் ஓட்டில் எங்கும் சென்று குருதிப்பலி ஏற்றமையையும் நினைப்பிக்கும். நோக்கிடு மெய், வினைத்தொகை. `செம்மையாக` என ஆக்கம் வருவிக்க. `வயிரவன் மெய்` என இயையும்.
இதனால், வயிரவத் தியான முறை கூறப்பட்டது.