ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. எளிய வாதுசெய் வார்எங்கள் ஈசனை
    ஒளியை உன்னி உருகும் மனத்தராய்த்
    தெளியவே ஓதின் சிவாயநம என்னும்
    குளிகையை இட்டுப்பொன் னாக்குவான் கூட்டையே.
  • 2. தெள்ளமு தூறச் சிவாய நமவென்(று)
    உள்ளமு தூற ஒருகால் உரைத்திடும்
    வெள்ளமு தூறல் விரும்பிஉண் ணாதவர்
    துள்ளிய நீர்போற் சுழல்கின்ற வாறே.
  • 3. சிவன் சத்தி சீவன் செறுமலம் மாயை
    அவம் சேர்த்த பாசம் மலம்ஐந் தகலச்
    சிவன்சத்தி தன்னுடன் சீவனார் சேர
    அவம் சேர்த்த பாசம் அணுககி லாவே.
  • 4. சிவனரு ளாய சிவன்திரு நாமம்
    சிவன் அருள் ஆன்மாத் திரோதம் மலமாய்ச்
    சிவன்முத லாகச் சிறந்து நிரோதம்
    பவம தகன்று பரசிவ னாமே.
  • 5. நமாதி நனாதி திரோதாயி யாகித்
    தமாதிய தாய்நிற்கத் தாள்அந்தத் துற்றுச்
    சமாதித் துரியந் தமதாகம் ஆக
    நமாதி சமாதி சிவஆதல் எண்ணவே.