ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 6. பஞ்சாக்கரம் - சூக்குமம்

பதிகங்கள்

Photo

நமாதி நனாதி திரோதாயி யாகித்
தமாதிய தாய்நிற்கத் தாள்அந்தத் துற்றுச்
சமாதித் துரியந் தமதாகம் ஆக
நமாதி சமாதி சிவஆதல் எண்ணவே.

English Meaning:
How Through Na Ma Si Va Ya Union in Jiva Occurs in Samadhi

Na Ma and the rest (Na Ma Si Va Ya)
Pervading Jiva in his five states of Consciousness
Waking, dreaming and the rest,
Stand forth as Tirodayi, the Sakti of Obfuscation (Verily)
And She in turn leads to the Pure Sakti that leads to Grace,
Then does Jiva reach the Final state of Turiya in Samadhi;
Thus meditating on Na Ma and the rest,
The Jiva unites in Siva.
Tamil Meaning:
நமாதி - `நம` என்பதை முதலாக உடைய தூல பஞ்சாக்கரம். திரோதாயி ஆகி நனவாதி - திரோதான சத்தி வசப்பட்டதாய்ச் சகல கேவலங்களில் நிகழும் சாக்கிரம் முதலிய அவத்தைகளை உண்டாக்கும். (இனி) சமாதித் துரியம் தமது அகம் ஆக-நின்மலாவத்தையே சீவர்களுக்கு உடம்பதாற் பொருட்டு தம் ஆதியாய் நிற்க - அப்பாஞ்சாக்கரம் சிவன் சத்திகளது வசமாதற் பொருட்டு தான் அந்தத்து உற்று முன் சொன்ன `நம` என்பது ஈற்றில் பொருந்த நம ஆதி சமம் சிவ ஆகி ஆதல் எண்ண - `நம` முதலுக்கு ஈடாகச் `சிவ` முதல் ஆவலைக் கருதுக.
Special Remark:
`நனவாதி` என்பது அகரம் தொக ``நனாதி`` என்று ஆயிற்று. திரோதாயி ஆதல் திரோதாயி வசம் ஆதல். அஃதாவது, பந்தத்தைத் தருவது ஆதலாம். நின்மலாவத்தை `சமாதித் துரியம்` எனப் பின்னர் வருதலால், முதற்கண் உள்ள நனவாதிகள் சகலத்திலும் கேவலத்திலும் நிகழ்வனவாம் `நனவாதியைத் தரும்` என ஒரு சொல் வருவித்து முடிக்க. ``தமாதியது`` என்பதலி ``தம்`` என்றது சிவனையும், சத்தியையும் அங்கு ``ஆதியது`` என்றது, முதன்மையையுடையது வசப்பட்டது என்றவாறு. ``நிற்க`` என்பது, ``ஆக`` என்பதனோடு முடிய, ``ஆக`` என்பது ``ஆதல்`` என்பதனோடு முடிந்தது ``நிற்க`` என்பதற்கு நமாதியைச் சுட்டும் `அத` என்பது வருவிக்க ``தான்`` என்றது, முதற்கண் கூறிய நம ஆதியதைதான் ``அந்தம் உற்று`` என்பதில், ``உற்று`` என்பதை `உற` எனத் திரித்து, அத்தொடரை ஈற்றடியின் முதலிற் கூட்டுக. தமது - சீவர்களது. ஆகம் - உடம்பு. சமாதி - பரம்பொருளோடு ஒன்றுதல், அஃது அத்தன்மையதாகிய நின்மலாவத்தையைக் குறித்தது. அந்நிலையில் திருவருளாய் நிற்றலால் ``தமது ஆகம் சமாதித் துரியம் ஆக`` என்றார் `சிவ ஆதி, நம ஆதி சமம் ஆதல் எண்ண` என மாற்றியுரைக்க. `சமம்` என்பது ஈற்று அம்முத் தொகநின்றது. சமம் ஆதல், ஈடாதல். ``எண்ண`` என்பது அகர ஈற்று வியங்கோள் `எண்ணுக` என்றது `ஆய்ந்தறிக` என்றதாம்.
அவத்தை வேறுபாடுகளை முன் மந்திரத்தில் காண்க.
இதனால், தூல பஞ்சாக்கரம் சகல கேவலங்களாய் , நிற்க, சூக்கும பஞ்சாக்கரம் சுத்தத்திற்கு ஏதுவாதல் கூறிமுடிக்கப்பட்டது.