ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. வேடங் கடந்த விகிர்தன்றன் பால்மேவி
    ஆடம் பரமின்றி ஆசாபா சஞ்செற்றுப்
    பாடொன்று பாசப் பசுத்துவம் பாழ்படச்
    சாடும் சிவபோ தகர்சுத்த சைவரே.
  • 2. உடலான ஐயைந்தும் ஒன்றும் ஐந்தும்
    மடலான மாமாயை மற்றுள்ளம் நீவப்
    படலான கேவல பாசந் துடைத்துத்
    திடமாய்த் தனையுறல் சித்தாந்த மாமே.
  • 3. சுத்தச் சிவனுறை தானத்தில் தோயாமல்
    முத்தர் பதப்பொருள் முத்திவித் தாம்மூலம்
    அத்தகை ஆன்மா அரனை அடைந்தற்றால்
    சுத்த சிவமாவ ரே சுத்த சைவரே.
  • 4. நானென்றும் தானென்றும் நாடிநான் சாரவே
    தானென்று நானென் றிரண்டிலாத் தற்பரம்
    தானென்றும் நான் என்ற தத்துவம் நல்கலால்
    தானென்றும் நானென்றும் சாற்றகில் லேனே.
  • 5. சாற்றரி தாகிய தத்துவம் சித்தித்தால்
    ஆற்றரி தாகிய ஐந்தும் அடங்கிடும்
    மேற்றிகழ் ஞானம் விளக்கொளி யாய்நிற்கும்
    பாற்பர சாயுச்சிய மாகும் பதியே.