ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. எளியநற் றீபம் இடல்மலர் கொய்தல்
    அளியின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல்
    பளிபணி பற்றல் பன்மஞ்சன மாதி
    தளிதொழில் செய்வது தான்தாச மார்க்கமே.
  • 2. அதுவிது ஆதிப் பரமென் றகல்வர்
    இதுவழி சென்றங் கிறைஞ்சின ரில்லை
    விதிவழி யேசென்று வேந்தனை நாடும்
    அதுவிதி நெஞ்சில் அளிக்கின்ற வாறே
  • 3. அந்திப்பன் திங்கள் அதன்பின்பு ஞாயிறு
    சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல்
    வந்திப்பன் வானவர் தேவனை நாடொறும்
    வந்திப்ப தெல்லாம் வகையின் முடிந்ததே.
  • 4. அண்ணலை வானவர் ஆயிரம் பேர்சொல்லி
    உன்னுவர் உள்மகிழ்ந் (து) உள்நின் றடிதொழக்
    கண்ணவன் என்று கருது மவர்கட்குப்
    பண்ணவன் பேரன்பு பற்றிநின் றானே.
  • 5. வாசித்தும் பூசித்தும் மாமலர் கொய்திட்டும்
    பாசிக் குளத்தில்வீழ் கல்லாம் மனம் பார்க்கின்
    மாசற்ற சோதி மணிமிடற் றண்ணலை
    நேசித் திருந்த நினைவறி யாரே.