ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. குரைக்கின்ற வாரிக் குவலயம் நீரும்
    பரக்கின்ற காற்றும் பயில்கின்ற தீயும்
    நிரைக்கின்ற வானிவை நீண்டகன் றானை
    வரைத்து வலம்செயு மாறறி யேனே.
  • 2. வரைத்து வலஞ்செயு மாறிங்கொன் றுண்டு
    நிரைத்து வருகங்கை நீர்மலர் ஏந்தி
    உரைத்தவன் நாமம் உணரவல் லார்க்குப்
    புரைத்தெங்கும் போகான் புரிசடை யானே.
  • 3. ஒன்றெனக் கண்டேன்எம் ஈசன் ஒருவனை
    நன்றென் றடியிணை நான்அவ னைத்தொழ
    வென்றைம் புலனும் மிகக்கிடந் தின்புற
    அன்றென் றருள்செயும் ஆதிப் பிரானே.
  • 4. மலர்ந்த அயன்மால் உருத்திரன் ஈசன்
    பலந்தரும் ஐம்முகன் பரவிந்து நாதம்
    நலந்தரும் சத்தி சிவன்வடி வாகிப்
    பலந்தரும் லிங்கம் பராநந்தி யாமே.
  • 5. மேவி யெழுகின்ற செஞ்சுட ரூடுசென்(று)
    ஆவி யெழுமள வன்றே உடல்உற
    மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும்
    பாவித் தடக்கிற் பரகதி தானே.