ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்
    உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர்
    கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்
    பெற்றிருந் தாரன்றி யார்பெறும் பேறே.
  • 2. பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
    சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
    அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடும்
    சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே. 
  • 3. மந்திரம் ஒன்றே உரைசெய்த மாதவர்
    சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்
    பிந்திச் சுணங்காய்ப் பிறந்தொரு நூறுரு
    வந்து புலையராய் மாய்வர்கள் மண்ணிலே. 
  • 4. சன்மார்க்க சற்குரு சந்நிதி பொய்வரின்
    நன்மார்க்க முங்குன்றி ஞானமுந் தங்காது
    தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப்
    பன்மார்க்க முங்கெட்டுப் பஞ்சமு மாமே. 
  • 5. கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு
    வெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதிபோன்றும்
    நெய்ப்பட்ட பால்இள நீர்தயிர்தான் நிற்கக்
    கைப்பிட்டுண் பான்போன்றும் கன்மிஞா னிக்கொப்பே.