ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 22. குரு நிந்தை கூடாமை

பதிகங்கள்

Photo

மந்திரம் ஒன்றே உரைசெய்த மாதவர்
சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்
பிந்திச் சுணங்காய்ப் பிறந்தொரு நூறுரு
வந்து புலையராய் மாய்வர்கள் மண்ணிலே. 

English Meaning:
The virtuous wife, devotee true, and Jnani great
Those who have done exceeding harm to shock these
Their life and wealth will in a year disappear,
True this is,
Upon Holy Nandi, I swear.
Tamil Meaning:
மந்திரமாவனவற்றுள் ஒன்றையே உபதேசித்தவ ராயினும், அவரது மனம் நோவத் தீமைகளைச் செய்தவர்கள், இம் மண்ணுலகில் யாவரும் இகழ்ந்து ஒதுக்குகின்ற நாயாய் நூறுமுறை பிறந்து, பின்பு மக்களாய்ப் பிறக்கினும் புலையராய்ப் பிறந்து, இம்மை மறுமைகளில் யாதொரு பயனையும் எய்தாது வாளா இறந்தொழிவர்.
Special Remark:
`ஒருபிறப்பில் குருவை இகழ்ந்தவர் பல பிறப்புக்களில் பலராலும் இகழும் நிலையை அடைவர்` என்பதாம். மந்திரத்தைப் பன்முறை கணித்துப் பயன் பெற்றவரை ``மாதவர்`` என்றார். `சுணங்கன்` என்பது கடைக்குறைந்தது. இத் திருமந்திரத்தின் பாடம் பெரிதும் வேறுபட்டுள்ளது.
இதனால், மந்திர குருவை (கிரியா குருவை) நிந்தித்தல் விலக்கப்பட்டது.
இதன்பின்னர் உள்ள, ``ஈசனடியார்`` என்னும் திருமந்திரம் அடுத்த அதிகாரத்ததாம்.