
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 22. குரு நிந்தை கூடாமை
பதிகங்கள்

மந்திரம் ஒன்றே உரைசெய்த மாதவர்
சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்
பிந்திச் சுணங்காய்ப் பிறந்தொரு நூறுரு
வந்து புலையராய் மாய்வர்கள் மண்ணிலே.
English Meaning:
The virtuous wife, devotee true, and Jnani greatThose who have done exceeding harm to shock these
Their life and wealth will in a year disappear,
True this is,
Upon Holy Nandi, I swear.
Tamil Meaning:
மந்திரமாவனவற்றுள் ஒன்றையே உபதேசித்தவ ராயினும், அவரது மனம் நோவத் தீமைகளைச் செய்தவர்கள், இம் மண்ணுலகில் யாவரும் இகழ்ந்து ஒதுக்குகின்ற நாயாய் நூறுமுறை பிறந்து, பின்பு மக்களாய்ப் பிறக்கினும் புலையராய்ப் பிறந்து, இம்மை மறுமைகளில் யாதொரு பயனையும் எய்தாது வாளா இறந்தொழிவர்.Special Remark:
`ஒருபிறப்பில் குருவை இகழ்ந்தவர் பல பிறப்புக்களில் பலராலும் இகழும் நிலையை அடைவர்` என்பதாம். மந்திரத்தைப் பன்முறை கணித்துப் பயன் பெற்றவரை ``மாதவர்`` என்றார். `சுணங்கன்` என்பது கடைக்குறைந்தது. இத் திருமந்திரத்தின் பாடம் பெரிதும் வேறுபட்டுள்ளது.இதனால், மந்திர குருவை (கிரியா குருவை) நிந்தித்தல் விலக்கப்பட்டது.
இதன்பின்னர் உள்ள, ``ஈசனடியார்`` என்னும் திருமந்திரம் அடுத்த அதிகாரத்ததாம்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage