ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 20. ஊழ்

பதிகங்கள்

Photo

ஆனை துரத்தில்என் அம்பூ டறுக்கில்என்
கானத் துழுவை கலந்து வளைக்கில்என்
ஏனைப் பதியினில் எம்பெரு மான்வைத்த
ஞானத் துழவினை நான்உழு வேனே.

English Meaning:
Plough the Field of Jnana

What though the elephant pursues,
What though the arrow pierces,
What though the wild tiger surrounds,
Deep I plough the field of Jnana
In the Other Land,
Lord has me allotted.
Tamil Meaning:
இவ் இருமந்திரங்களின் பொருளும் வெளிப்படை.
Special Remark:
`இயற்கைச் சீற்றங்கள்` என உலகத்தார் வழங்குவன வாகிய பெருங்கேட்டுச் செயல்கள் தேவர் முதலியோர்க்கும் பேரச்சம் விளைப்பயனவாயினும் சிவனடியார் உள்ளங்கள் சிறிதும் அஞ்சமாட்டா` என்பது முன் மந்திரத்திலும், `கொடு விலங்குகளாலும், பகைவராலும் வரும் கேடுகட்கும் அவர்களது உள்ளம் நடுங்கா` என்பது பின் மந்திரத்திலும் சொல்லப்பட்டன.
``ஒருவர் தமர் நாம்;
அஞ்சுவது யாதொன்றும் இல்லை;
அஞ்ச வருவதும் இல்லை;
``வானம் துளங்கி என்? மண்கம்பம் ஆகில் என்?
மால்வரையும்
தானம் துளங்கித் தலைதடு மாறில் என்?
தண்கடலும்
மீனம் படில் என்? விரிசுடர் வீழில் என்?
வேலை நஞ்சுண்டு
ஊனம்ஒன் றில்லா ஒருவனுக்கு ஆட்பட்ட
உத்தமர்க்கே``
``மண்பா தலம்புக்கு, மால்கடல் மூடி,மற்
றேழுலகும்
விண்பால் திசைகெட்டு, இருசுடர் வீழினும்
அஞ்சல் நெஞ்சே!
தின்பால் நமக்கொன்று கண்டோம்;
திருப்பா திரிப்புலியூர்க்
கண்பாவு நெற்றிக் கடவுட் சுடரான்
கழலிணையே``
``மலையே வந்து விழினும், மனிதர்காள்`
நிலையி னின்று கலங்கப் பெறுதிரே?
தலைவ னாகிய ஈசன் தமர்களைக்
கொலைசெய் யானைதான் கொன்றிடு கிற்குமே? *
என்னும் திருமொழிகளை இம்மந்திரங்களோடு ஒப்பிடுக.
கான், கானம் - காடு. மாருதல் - காற்று. சண்டம் - வேகம். `சண்டமாய்` என ஆக்கம் விரிக்க. ``நான்`` இரண்டில் முன்னது `நான்` என்னும் போதம். உழுவை - புலி. ஏனைப் பதி - உயிர்கள் வாழும் ஊர் அல்லாத வேறோர் ஊர். அஃது அவன் வாழ்வது; திருவருள். `என்னையும்` `அதில் கொண்டு போய் வை்ததான். அங்கே நான் ஞானத் தொழிலைச் செய்து கொண்டிருக்கின்றேன். அதனால், இடி வீழ்தல் முதலிய அழிவு நிகழ்ச்சிகளைக் கண்டு என் உள்ளம் துணக்குறாது` என்பதாம். ஞானத் தொழில் - ஞானச் செய்தி. அவை தசகாரியம். ஆகவே, இதனால் வருகின்ற அதிகாரத்திற்கும் தோற்றுவாய் செய்யப்பட்டதாம். ``உழுவேன்`` என்றது `செய்வேன்` என்னும் அளவாய் நின்றது.
இதனால், ஞானிகள் தமக்கு வரும் ஊழாலேயன்றி உலகிற்கு வரும் ஊழாலும் உள்ளம் கலங்காமை கூறப்பட்டது.