ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 20. ஊழ்

பதிகங்கள்

Photo

ஆறிட்ட நுண்மணல் ஆறே சுமவாதே
கூறிட்டுக் கொண்டு சுமந்தழி வாரில்லை
நீறிட்ட மேனி நிமிர்சடை நந்தியை
பேறிட்டென் உள்ளம் பிரயகி லாதே.

English Meaning:
Understanding Logic of Karmic Law, I Sought Nandi

The sands the river deposits
Are by the river carried away;
To none else is that task apportioned;
(And so)
I sought Nandi
Of holy ashes and erect matted locks,
And with Him inseparate stood, devout intense.
Tamil Meaning:
(ஆற்றில் மணல் சமப்பரப்பாய்ப் பரந்திருப்பின் அஃது அதற்கு ஒரு சுமையாய் இராது. ஆனால் ஆறு சமமாய் இல்லாமையால், அதில் வெள்ளம் வரும்பொழுது பள்ளம் மேடுகள் மாறி மாறி அமைய சில இடங்கள் பெரிய மேடுகள் ஆகிவிடுகின்றன.) அந்த மேடுகளை அந்த ஆறு தான் சுமக்க வேண்டுமேயன்றி, அவைகளைப் பங்கு செய்து எடுத்துக் கொண்டு போய்ச் சுமப்பார் ஒருவரும் இல்லை. (அதுபோல, அவரவர் செய்த வினையின் பயனை அவரவரே அனுபவிக்க வேண்டுமன்றி அனுபவிப்பவர் வேறுயாரும் இலர். இதனை நன்குணர்ந்த எனது உள்ளம்) சிவனைப் பெறற்கரிய பேறாக உணர்ந்து அவனைத் தவிர வேறொன்றைப் பற்றுதலை ஒழிந்தது;
Special Remark:
`அதனால், ஊழும் என்னைத் தாக்கவில்லை. அத் தாக்குதலால் தோன்றக் கூடிய ஆகாமியமும் தோன்றவில்லை` என்பது குறிப்பெச்சம். ``நீறிட்ட மேனி`` என்றது, `அவன் தன் அடியார்களது வினையைப் பொடியாக்குபவன்` என்னும் குறிப்பையும், ``நிமிர் சடை`` என்றது, உலகப் பற்றநைீக்கு பவன்` என்னும் குறிப்பையும் உடையன. பேறிட்டு - பேறாதலையிட்டு. `இட்டு` என்பது காரணத்தை உணர்த்தி வருதல் நாட்டு வழக்கு. முன் இரண்டடிகள் ஒட்டணியாய் நின்றமையால், அதற்குரிய பொருள் வருவித்துரைக்கப்பட்டது. ஆறு - உயிர். அது சமம் இன்மை உயிர் சமபுத்தி உடையதாகாமை. வெள்ளம் - ஊழ். மேடு பள்ளங்கள் - ஊழால் விளையும் ஆகாமிய வினைகள். ``சமவாதே`` என்னும் ஏகாரம், அசை.
இதனால், அவரவர் வினை அவரவருக்கே பயனாதல் உவமை முகத்தால் விளக்கப்பட்டது. சித்திற்குச் சட்டம் உவமை யாதலும் உவமத்திற்கு ஏற்புடையதே. அதிகாரப் பொருளை வலியுறுத் -தற்கு அதனை வெல்லுமாறும் உடன் கூறப்பட்டது.