ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 29. உபசாந்தம்

பதிகங்கள்

Photo

ஆறா றமைந்தா றவத்தையுள் நீங்குதல்
பேறான தன்னை அறிதல் பின் தீர்சுத்தி
கூறாத சாக்கிரா தீதம் குருபரன்
பேறாம் வியாத்தம் பிறங்குப சாந்தமே.

English Meaning:
Beyond Jiva Turiya and Para Turiya is Upasanta

Removing Anava within,
Entwined with Tattvas six times six,
And realizing Self-knowledge,
—These acts of purification
To Jagrat-Turiya (Jiva Turiya) State belongs;
The Grace of Guru Param dawns
In the Jagratatita Turiya (Para Turiya)
That defies speech;
When that is crossed and Siva Turiya is reached,
Then is Upasanta pervasive.
Tamil Meaning:
முப்பத்தாறு தத்துவங்களும் தன்னின் மேம்பட்டுத் தன்னை மயக்காதபடி அவைகளைக் கீழ்ப்படுத்தி, அவைகளால் வரும் மயக்கத்தினின்றும் நீங்குதலே தன்னைத் தான் பெறுதலாகிய ஆன்ம தரிசனமாகும். (சிவரூபம் இதில் உடன் நிகழும். ``தன் உயிர் தான் அறப் பெற்றானை ஏனைய மன்னுயிரெல்லாம் தொழும்`9 என்றார் திருவள்ளுவரும்) ஆன்ம தரிசனத்திற்குப்பின் நிகழ்வதாகிய ஆன்ம சுத்தியாவது, சொல் நிகழ்ச்சியில்லாத, மௌன நிலையாகிய நின்மல துரியாதீதமாகும். (இதில் சிவதரிசனமும், சிவயோகமும் உடன் நிகழும்) ஆன்ம சுத்திக்குப் பின் அடையற்பலாதாகிய ஆன்ம லாபமாகிய சிவப்பேறாவது, பர துரியா தீதமே.
Special Remark:
ஆறுதல் - அடங்குதல்; கீழ்ப்படுதல். தீர்தல் - மும்மலங்களும் நீங்குதல். குருவாகிவந்து அருள்செய்யும் அருட் பெருக்குப் பற்றிச் சிவனை, ``குருபரன்`` என்றார். குருபரம் - குருமார்களுக்கெல்லாம் மேலான குரு; ஞானகுரு. வியாத்தம் - வியாத்தி; சம நிறைவு. சமமாதல், சிவ வியாபகத்தோடாம். ஆன்மாச் சிவத்தில் வியாப்பிய மாயினும் பெத்தத்தில் ஏகதேசமாய் நின்ற நிலையினின்றும் நீங்கி வியாபகமாயினமை பற்றி ``வியாத்தி`` என்றார்.
இதனால், உபசாந்தத்தை அதற்கு இனமாய் முன்னிகழ்வன வற்றோடு ஒப்பித்துக்காட்டி அதன் இயல்பு இனிது விளக்கப்பட்டது. இதனானே அவற்றது இயல்புகளும் தெளிவிக்கப்பட்டன.