ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 24. மனவாதித்தன்

பதிகங்கள்

Photo

ஒன்பதின் மேவி உலகம் அலம்வரும்;
ஒன்பதும் ஈசன் இயல்பறி வார்இல்லை;
முன்பதின் மேவி முதல்வன் அருள்இலார்
இன்பம் இலார்; இருள் சூழநின் றாரே.

English Meaning:
The Nine Planets Lacking Grace Whirl in Darkness

The nine orbs (planets) go round the earth,
But none of the nine, knows Lord;
Well may the nine orbs, Him, propitiate;
Yet His Grace they receive not;
Devoid of bliss, in darkness surrounded they are.
Tamil Meaning:
உலகம் ஒன்பது கோள்களில் உளம்பொருந்தி, அதனால் அமை காணாது அலமருகின்றது. (``வேரண்டத் துள்ளே பிறங்கொளியாய் நின்றது`` என மேற்கூறியபடி) `ஒன்பது கோள்களின் ஆற்றலும் சிவனது ஆற்றலே` என்னும் உண்மையை உணர்ந்து அவனையடைந்து அமைதிகாண்பவர் ஒருவரும் இல்லை. முதலில் அந்நிலையில் நிற்பினும் பின்பாவது அருளாளரது அருள் மொழிகளைக் கேட்டுச் சிவனது அருளைப் பெறாதவர் ஒரு ஞான்றும் இன்பம் இல்லாதவரேயாய்த் துன்பத்தையே உடையவராய் இருப்பர்.
Special Remark:
`வலம் வரும்` - என்பது பாடமன்று. இருள், இங்குத் துன்பம். இதனுட் கூறப்பட்டாரெல்லாம் அண்டாதித் பிண்டாதித் தர்களால் மனம் ஆதித்தனாகப் பெறாதவர் என்க.
இதனால், மனம் ஆதித்தனாகப் பெறாதவர் எய்தும் குற்றம் கூறப்பட்டது.