ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 6. கிரியை

பதிகங்கள்

Photo

பத்தன் கிரியை சரியை பயில்வுற்றுச்
சுத்த அருளால் துரிசற்ற யோகத்தில்
உய்த்த நெறியுற் றுணர்கின்ற ஞானத்தால்
சித்தம் குருவரு ளால்சிவ மாகுமே.

English Meaning:
The Four Paths are the Steps in the Ladder to Siva Union

The Bhakta to begin with practises Chariya and Kriya,
Then blessed with grace takes to Yoga pure;
And that way reaches the path of Jnana
And in the end by Guru`s grace becomes one with Siva.
Tamil Meaning:
பத்தியை வேண்டுபவன், முன்னே சரியை கிரியை களிற் பழகிப் பின்பு சத்திநிபாத முதிர்வால் குற்றம் அற்ற சிவயோகத் தில் மனத்தை செலுத்தும் வழியிலே பொருந்தி, அதனால், முதிர்ந்து வருகின்ற ஞானத்தால் குருவருள் வாய்க்கப் பெற்றுப் பின்பு அவ்வருளானே சிவத்தை அடைந்து சிவமேயாவான்.
Special Remark:
அதிகார இயைபுபற்றி, கிரியை முற்கூறப்பட்டது ``சுத்தம்`` என்றது பிறவற்றைக் கீழ்ப்படுத்துத் தான்மிக்குத் தோன்று தலை. அடயோகம் முதலியவற்றால் மலம் நீங்காமையின் அது நீங்குத லாகிய சிவயோகத்தை, ``துரிசற்ற யோகம்`` என்றார். உய்த்தலுக்குச் செயப்படுபொருள் வருவிக்க. ``சித்தம்`` என்றது அறிவை ``குரு வருளால்``என்ற அனுவாதத்தால், குருவருள் ஆதலும் பெறப் பட்டது. `சரியை கிரியைகளாகிய பத்தி நெறியில் நின்றோன் பின்பு யோக ஞானங்களாகிய ஞான நெறியைத் தலைப்பட்டுப் பின் அது வழியாகச் சிவமாம் தன்மைப் பெருவாழ்வு எய்துவன்` என்றவாறு.
இதனால், மேற் கூறிய பத்தி நெறி, ஞானம் வாயிலாக வீட்டைத் தருதல் கூறப்பட்டது.