ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 6. கிரியை

பதிகங்கள்

Photo

பத்துத் திசையும் பரம்ஒரு தெய்வமுண்டு
எத்திக் கினில்இல்லை என்பது இனமலர்க்
கொத்துத் திருவடி நீழல் சரண்எனத்
தத்தும் வினைக்கடல் சாராது காணுமே.


கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுறு மாமல ரிட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது
தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே.

English Meaning:
God is Everywhere — Seek Him

The One God there is
He pervades the ten directions around,
In which direction can we say is He not?
So, do take refuge under His Holy Feet
Then shall you cross the roaring Sea of Karma,
And safe reach the Shores of Beyond.
True Worship is Worship Within

You may adore Him with sandal fragrance exceeding,
That grows on peaks atop in forests interior,
You may worship Him with flowers rare,
That bloom in Heaven`s gardens
Unless you shed your fleshy attachments
And realize Him in the depths of your heart
You shall never never reach His Holy Feet
That is like flowers that shed honey dew.
Tamil Meaning:
எல்லாத் தெய்வங்கட்கும் மேலான ஒரு தெய்வ மாகிய சிவபிரான் பத்துத் திசைகளிலும் நிறைந்திருக்கின்றான். அவனை எந்தத் திசையில் `இல்லை` என்று கூறமுடியும்! ஆதலால், பலவகை மலர்க் கூட்டத்தைக் கொண்டு அவனது திருவடியையே புகலிடமாகக் கருதி வழி பட்டால், பொங்கிப் புரண்டு வருகின்ற வினையாகிய கடல் வந்து மோத மாட்டாது ஒழியும்.
Special Remark:
`ஆதலின், அதனைச் செய்க, என்பது குறிப்பெச்சம். இரண்டாம் அடியில், ``எத்திக் கினிலில்லை`` என்பதைப் பிறவாறு ஓதுவன பாடமாகா என அறிந்து கொள்க. `கொத்தோடு` என மூன்றாவது விரிக்க.
இதனால், `கிரியையாவது சிவபெருமானை மலர்தூவி வழி பகுதலேயாம்` என்பது கூறப்பட்டது.
இதன் பின் பதிப்புக்களில் உள்ள ``கானுறு கோடி`` என்னும் மந்திரம் பின்னர் ஏழாம் தந்திரத்தில் `குருபூஜை` அதிகாரத்தில் வருவது.